பதிவு செய்த நாள்
19 பிப்2018
02:26
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், நிப்டியில், முந்தைய இரு வார சரிவுக்குப் பின், கடந்த வாரம் பெரிய மாற்றமில்லாமல், சிறிய சரிவில் வர்த்தகம் நடைபெற்றது. ஏறத்தாழ, 185 புள்ளிகள் குறைந்து, 10 ஆயிரத்து, 435 புள்ளிகளுடன் முடிவுற்றது.
இம்மாத ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் மற்றும் அதில் கொண்டு வரப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாயத்தின் மீதான வரி விதிப்பு ஆகியவற்றால் சரிவு நீடித்து வருகிறது.அமெரிக்காவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, அரசு கருவூல ஆதாயம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச் சந்தையின் சரிவு, அனைத்து நாடுகளிலும் காணப்பட்டது.
மேலும், கடந்த வாரம் வெளிவந்த வங்கிகளின் வாராக்கடன் அளவு, முந்தைய ஐந்தாண்டுகளுக்கு முன் இருந்ததை விட அதிகரித்ததும், அதை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய கொள்கைகளும் சந்தையை பாதித்தன. மேலும், பஞ்சாப் நேஷனல் பேங்கில் நடைபெற்ற, 11 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் பண மோசடியும், சந்தையில் பாதிப்பை உண்டாக்கியது.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, நம் உள்நாட்டு பங்குச் சந்தை குறியீட்டு எண், பிற நாடுகளில் வர்த்தகமாவது, வரும், 6 மாதத்திற்கு முழுமையாக நிறுத்தப்படும் என அறிவித்தது. இதனாலும் சந்தையில் பாதகமான போக்கு ஏற்பட்டு, பங்குகள் விலை சரிய காரணமானது. குறிப்பாக, பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன.
இன்று, அமெரிக்கா மற்றும் சில ஆசிய சந்தைகளுக்கு விடுமுறை தினமாகும். இந்த வாரத்தை பொறுத்தவரை, முக்கிய பொருளாதார காரணிகள் எதுவும் வெளியாகப் போவதில்லை. வரும் வியாழன் அன்று, ‘எப் அண்டு ஓ’ செட்டில்மென்ட் உள்ளது. இம்மாதம் இதுவரை, நிப்டி, 6.5 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஓர் ஆண்டு காலமாக நிப்டி, 100 நாட்கள் சராசரியான, 10 ஆயிரத்து, 318 புள்ளிகளுக்கு கீழே வியாபாரம் நடைபெறவில்லை. இது நல்ல, ‘சப்போர்ட்’ ஆகும். ரெசிஸ்டென்ட், 11 ஆயிரத்து, 40 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்ஐ.டி.சி.,இன்போசிஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆதித்ய பிர்லா கேப்பிட்டல், சிப்லா
-முருகேஷ் குமார், ரிசர்ச் அனலிஸ்ட்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|