பதிவு செய்த நாள்
19 பிப்2018
02:36
தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., முதலீட்டில் நீண்டகால மூலதன ஆதாய வரி விதிப்பால் அதிக பாதிப்பு இருக்காது என, பென்ஷன் நிதி ஆணைய தலைவர் ஹேமந்த் கான்ட்ராக்டர் கூறிஉள்ளார்.
மூலதன ஆதாய வரியால் என்.பி.எஸ்., முதலீட்டில் அதிக பாதிப்பு இருக்காது. இதன் கீழான முதலீடு என்.பி.எஸ்., அறக்கட்டளை மூலம் செய்யப்படுகிறது. இந்த அறக்கட்டளை வரி விலக்கு பெற்றது. எனவே, மூலதன ஆதாய வரி விதிப்பால் பென்ஷன் முதலீட்டின் மீது தாக்கம் இருக்காது என்று அவர் தெரிவித்தார். எனினும் என்.பி.எஸ்., திட்ட இரண்டாம் அடுக்கு கணக்கின் மீது பாதிப்பு இருக்கலாம் என்றும், இந்த கணக்கில் கீழ் வரும் முதலீடு சொற்ப மானது என்றும் அவர் என்.பி.எஸ்., தொடர்பாக அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் பேசும் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், ஒரு கோடி உறுப்பினர்கள் இலக்கை மார்ச் மாதம் அடைய முடியும் என, நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|