‘கடுமையான கடன் விதிமுறைகளால் தொழில் துறைக்கு பாதிப்பு ஏற்படும்’‘கடுமையான கடன் விதிமுறைகளால் தொழில் துறைக்கு பாதிப்பு ஏற்படும்’ ... ஹோலிப் பண்டிகை : பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை ஹோலிப் பண்டிகை : பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
லாபமீட்டாத பொது துறை வங்கிகளின் 35 வெளிநாட்டு கிளைகளை மூட உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2018
00:25

புதுடில்லி:பொதுத் துறை­யைச் சேர்ந்த, முன்­னணி வங்­கி­க­ளின், லாப­மீட்­டாத,
35 வெளி­நாட்டு கிளை­களை மூட, மத்­திய அரசு உத்­த­ரவு பிறப்­பித்து உள்­ளது. இது தவிர, மேலும், 69 வெளி­நாட்டு வங்கி கிளை­களை மூடு­வது குறித்­தும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கிறது.

நடப்பு, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், செப்., இறுதி நில­வ­ரப்­படி, பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக்­க­டன், 7.34 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது. வாராக்­க­டன் சுமை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, மத்­திய அரசு ஏற்­க­னவே, மறு பங்கு மூல­தன திட்­டத்தை
அறி­வித்­துள்­ளது. இந்­நி­லை­யில், பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில், போலி கடன் பொறுப்­பேற்பு கடி­தம் மூலம், நிரவ் மோடி, மெஹல் சோக்சி உள்­ளிட்­டோ­ரின், 11,400 கோடி ரூபாய் மோசடி, கடந்த மாதம் அம்­ப­ல­மா­னது. இத­னால், போலி ஆவ­ணத்­தின்­படி கடன் வழங்­கிய, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, அல­கா­பாத் பேங்க், யூகோ பேங்க் உள்­ளிட்ட வங்­கி­களும் பாதிக்­கப்­பட்டு உள்­ளன.

மேலும், ஓரி­யன்­டல் பேங்க் ஆப் காமர்ஸ் உட்­பட, மேலும் பல வங்­கி­களில், ரோட்­டோ­மேக், துவா­ரகா தாஸ் சேத் போன்ற பல நிறு­வ­னங்­க­ளின் மோச­டி­களும் வந்த வண்­ணம் உள்­ளன.
அத­னால், பொதுத் துறை வங்­கி­களில், மோசடி தொகை, 20 ஆயி­ரம்கோடி ரூபாயை தாண்­டும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.இதன் கார­ண­மாக, மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் இணைந்து, புரை­யோ­டிக் கொண்­டி­ருக்­கும் பொதுத் துறை வங்­கி­களை சீர­மைப்­ப­தில், தீவி­ர­மாக கள­மி­றங்கி உள்­ளன.

மத்­திய அரசு, அதன் பங்­கிற்கு, ஏற்­க­னவே மறு பங்கு மூல­தன திட்­டத்­தின் கீழ், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, 2.11 லட்­சம் கோடி ரூபாய் அளிப்­ப­தாக அறி­வித்து, முதல்­கட்ட ஒதுக்­கீ­டும் செய்­துள்­ளது.இதை­ய­டுத்து, வங்கி ஆய்வு குழு அளித்­துள்ள பரிந்­து­ரையை ஏற்று, லாப­க­ர­மற்ற அல்­லது மிகக் குறை­வாக லாப­மீட்­டு­கிற பொதுத் துறை வங்­கி­க­ளின், வெளி­நாட்டு கிளை­களை மூட முடிவு செய்­துள்­ளது.


இது குறித்து, நிதி­­ அமைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:முதல்­கட்­ட­மாக, பொதுத் துறை வங்­கி­க­ளின், வெளி­நாட்டு கிளை­களில், 35 கிளை­களை மூட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், 65 கிளை­கள்மற்­றும் வெளி­நா­டு­களில் உள்ள, அவற்­றின்அலு­வ­ல­கங்­கள்,
வங்கி சேவை சார்ந்த துணை நிறு­வ­னங்­கள், கூட்டு நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்றை மூடு­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­ப­டு­கிறது.

அனைத்து பொதுத் துறை வங்­கி­க­ளின், வெளி­நாட்டு கிளை­க­ளை­யும் ஒரே குடை­யின் கீழ் ஒன்­றி­ணைத்து, வெளி­நாட்டு நிர்­வா­கச் செல­வு­களை குறைக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது.
இவ்­வாறு அவர் கூறி­னார்.

நீண்ட கால பயன்கள்

ரிசர்வ் வங்­கி­யின், இடர்ப்­பாட்டு கடன்­கள் தொடர்­பான புதிய விதி­மு­றை­க­ளால், இப்­பி­ரி­வின்
பெரு­ம­ளவு கடன், அடுத்த ஆறு மாதங்­களில், வாராக்­க­டன் பிரி­விற்கு மாறும். இது, வங்­கி­க­ளின் வாராக்­க­டன் சுமையை அதி­க­மாக்­கி­னா­லும், நீண்ட கால பயன்­களை அளிக்­கும்.

சவுரப் முகர்ஜி

தலைமை செயல் அதிகாரி, ஆம்பிட் கேப்பிட்டல்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)