பதிவு செய்த நாள்
06 மார்2018
00:57
புதுடில்லி:புதிய, ‘ஆர்டர்’கள் குறைந்ததால், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, பிப்ரவரியில், வீழ்ச்சி கண்டுள்ளது.இது குறித்து, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நாட்டின், சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும், என்.எம்.எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, பிப்ரவரியில், 47.8 புள்ளிகளாக சரிவடைந்து உள்ளது. இது, 2017 ஆகஸ்டுக்கு பின் காணப்படும் சரிவு நிலையாகும்.இந்தாண்டு ஜனவரியில், சேவைகள் துறை வளர்ச்சி, 51.7 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு கீழ் குறைந்தால், அது, வளர்ச்சி பின்னடைவை குறிக்கும்.
இது குறித்து, ஐ.எஸ்.எஸ்., மார்கிட் நிறுவனத்தின் பொருளாதார வல்லுனர், ஆஷ்னா தோதியா கூறியதாவது:சேவை துறைக்கான, தேவைப்பாடும், புதிய, ‘ஆர்டர்’களும் குறைந்துள்ளன. இதன் காரணமாக, 2017 நவம்பருக்கு பின், சேவை துறை வளர்ச்சி, முதன்முறையாக, பிப்ரவரியில் வீழ்ச்சி கண்டுள்ளது. இது, 2017 ஆகஸ்டுக்கு பின் ஏற்பட்டுள்ள பின்னடைவு.எனினும், ‘இது தற்காலிக பின்னடைவு’ என, சேவை நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. கடந்த, 2011 ஜூன் மாதத்திற்கு பின், வேலைவாய்ப்புகள் வேகமாக உருவாகின்றன; பணியாளர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அதனால், ‘அடுத்த, 12 மாதங்களில், வளர்ச்சி நன்கு இருக்கும்’ என, சேவை நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
எல்லாம் சேவையில் அடக்கம்
இந்திய சேவைகள் துறையில், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த சேவைகள் அடங்கி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|