பதிவு செய்த நாள்
20 மார்2018
01:57
புதுடில்லி : லெமன் ட்ரீ ஓட்டல்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இப்பங்கு வெளியீடு, 26ம் தேதி துவங்குகிறது. மொத்தம், 18.54 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 54 ரூபாய்; அதிகபட்ச விலை, 56 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 265 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில், பங்குகளை வாங்கலாம்.
இப்பங்கு வெளியீடு, 28ல் முடிவடைகிறது. முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், பங்குகள் மீது வர்த்தகம் துவங்கும். இப்பங்கு வெளியீட்டை, கோடக் மகிந்திரா கேப்பிடல் கம்பெனி, சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, ஜே.பி., மார்கன் இந்தியா ஆகியவை நிர்வகிக்கின்றன.
பட்டு கேஸ்வானி என்பவரால், 2002ல் டில்லியில் துவக்கப்பட்ட, லெமன் ட்ரீ ஓட்டல்ஸ் நிறுவனம், குறுகிய காலத்தில், விரைவான வளர்ச்சியை கண்டுள்ளது. இந்நிறுவனம், 28 நகரங்களில், 44 ஓட்டல்களை நிர்வகித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|