பதிவு செய்த நாள்
21 மார்2018
00:24
சென்னை : காய்கறி விலை, தொடர்ந்து சரிவில் இருப்பதால் வியாபாரிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு, கொத்தவால்சாவடி காய்கறி சந்தைகளில், சில நாட்களாக காய்கறி விலை தொடர்ந்து சரிந்து காணப்படுகிறது. சில்லரை விலையில் தக்காளி, 6 ரூபாய்க்கும், கோஸ், 7 ரூபாய்க்கும் விற்பனையானது. வெண்டைக்காய், பீன்ஸ் 15 ரூபாய்க்கும், புடலங்காய், முள்ளங்கி, சவ்சவ் உள்ளிட்டவை, 10 ரூபாய்க்கும் விற்பனையானது.காய்கறி லாபம், வண்டி வாடகை கூலிக்கு கூட போதவில்லை என, வியாபாரிகள் விரக்தியோடு கூறினர். ஆனால் விலை வீழ்ச்சியாலும் கோடை வெயில் தாக்கத்தாலும் மக்கள் காய்கறியை நாடத் துவங்கியுள்ளனர். விவசாயம் குறைந்துள்ளதால், அடுத்த சில நாட்களில் காய்கறி விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல் வரத்து அதிகரிப்பு
கோடை அறுவடையின் இரண்டாம் சாகுபடி நெல் வரத்து அதிகரித்துள்ளது.
ஜனவரியில் துவங்கிய கோடை அறுவடையை தொடர்ந்து, இரண்டாம் சாகுபடி முடிந்து, சென்னை அருகேயுள்ள, செங்குன்றத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திராவில் நெல்லுார், நாயுடுபேட்டையிலிருந்தும், திருவள்ளூர் சுற்றுவட்டாரத்திலிருந்தும் நெல் மூட்டைகள் அதிகளவு வந்துள்ளது.தற்போது பாபட்லா நெல் ரகம், 76 கிலோ மூட்டை 1,050 – 1,100 ரூபாய்க்கும், ரூபாலி நெல் ரகம் 900 – 950 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.சுகர்லெஸ் எனப்படும், எர்ரமல்லி நெல் ரகம் 1,300 – 1,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகாவில் இருந்தும் நெல் வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை துறைமுகம் சாதனை
சென்னை துறைமுகத்தில், 2017 – 18 நிதியாண்டில், 5 கோடி டன் சரக்கை கையாண்டு சாதனை புரிந்துள்ளது.
தனியார் துறைமுகங்களுடன் கடுமையான போட்டியை சந்தித்து வரும், சென்னை துறைமுகம், 2017 – 18 நிதியாண்டில், 5 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளதாக, துறைமுக தலைவர், ரவீந்திரன் கூறியுள்ளார். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், அண்டை துறைமுகங்களுக்கு, சென்னை துறைமுகம் தொடர்ந்து போட்டியை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கலாம்.
முட்டைகோஸ்:
மதுரை, மேட்டுப்பாளையம், கொடைக்கானல், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில், முட்டைகோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது. இங்கு கடந்த வாரம் ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது பாதியாக குறைந்து, 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வண்டி வாடகை, பறிப்பு கூலி கூட தரமுடியாமல், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|