பதிவு செய்த நாள்
24 மார்2018
00:37
சென்னை : கோவையில், தேனீ வளர்ப்புக்கு, நாளை இலவச பயிற்சி வழங்குகின்றனர்.
கோவை, நேரு நகரைச் சேர்ந்த ஆனந்த், கடந்த சில ஆண்டுகளாக தேனீ வளர்ப்பு மற்றும் அது சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதோடு, மற்றவர்களுக்கு இலவசமாக தேனீ வளர்ப்பு குறித்தும் கற்றுத் தருகிறார். நாளை, கோவையில், காளப்பட்டி பிரதான சாலையில், ஒரு நாள் இலவச பயிற்சி தரப்படுகிறது. இது குறித்து அவர் கூறியதாவது:தேனுக்கு நிகரான இயற்கை உணவு உலகில் வேறு எதுவும் இல்லை. கலப்படமில்லாத தேனை நாமே வீட்டில் தயாரிக்கலாம். நாவல் தேன், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. முருங்கை தேன், தாம்பத்திய வாழ்க்கைக்கு சிறந்தது. கொம்பு தேன், குழந்தைகள் சாப்பிட ஏற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தேனீ வளர்ப்பை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இலவசமாக பயிற்சி வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|