பதிவு செய்த நாள்
24 மார்2018
00:37
சென்னை : காய்கறி விலையில் முன்னேற்றம் இல்லாததால் வியாபாரிகள் விரக்தி அடைந்து உள்ளனர்.
கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறி விலையில் முன்னேற்றம் இல்லை. இதனால் தக்காளி, வெங்காயம், பீட்ரூட், உருளை, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் ஒரு கிலோ, 10 – 25 ரூபாய் என்ற நிலையிலேயே விற்பனையாகின.
இந்நிலையில் முட்டைகோஸ், நிலக்கடலையை தொடர்ந்து, மிளகாய்க்கும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்துாரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய், ஒரு குவிண்டால், 9,000 ரூபாய் வரையிலேயே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள், 6,000 ரூபாய் வரை நஷ்டமடைந்துள்ளதாக கூறுகின்றனர். நெல், கரும்பை போல், இதற்கும் அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|