பதிவு செய்த நாள்
26 மார்2018
04:09
இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து சரிவில் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி, வரலாற்று உச்சத்தில் இருந்து, 1,200 புள்ளிகள் சரிந்தும், மும்பை பங்குச் சந்தை குறியீடான, சென்செக்ஸ், 3,900 புள்ளிகள் சரிந்தும், தற்போது வர்த்தகம் நடக்கிறது.
2016 ஜனவரி முதல், சந்தை தொடர் உயர்வு கண்டு வந்ததின் பின் ஏற்பட்ட சரிவாகும் இது.இந்த வாரத்தின் மூன்று நாட்கள், நடப்பு நிதியாண்டின் கடைசி மூன்று நாட்களாகும். வியாழன், வெள்ளி கிழமைகள் சந்தைக்கு விடுமுறை தினமாகும். புதன் அன்று, எப் அண்டு ஓ செட்டில்மென்ட் உள்ளது. இதில் பெரிய அளவில், லாங் பொசிஷன் கேரிபார்வர்டு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மூன்று நாட்களில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் செயல்பாடு அதிகளவில் இருக்கும்.
பார்லிமென்டில் இரண்டாம் பட்ஜெட் கூட்டத் தொடர் பெரிய சர்ச்சை இல்லாமல் முடிவுற்றது. மார்ச் 5ம் தேதிக்குப் பின், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக செயல்பாடு முடக்கப்பட்டது.பொதுத்துறை வங்கிகளின் கடன் மோசடி மற்றும் பண ஊழல்கள் காரணமாக, அத்துறை சார்ந்த பங்குகள் சரிவை தொடர்கின்றன.
கடந்த வியாழன் அன்று, சீன இறக்குமதி பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர், 60 மில்லியன் டாலர் இறக்குமதி வரி விதித்தார். இதை தொடர்ந்து ஏற்பட்ட வர்த்தக மோதலால், சீனாவும் பதிலுக்கு, அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது வரிவிதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த இரு நாட்களில், அமெரிக்க பங்குச் சந்தை, 1,200 புள்ளிகள் சரிந்தது. மேலும், ஆசிய, ஐரோப்பிய சந்தைகளும் சரிவில் வர்த்தகம் ஆனது.தற்போது நிப்டி, 200 நாட்கள் தினசரிக்கும் கீழ் முடிவை எட்டியது. இதன் காரணமாக, மேலும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்த சப்போர்ட் 9685 ஆகும். ரெசிஸ்டென்ட் 10,712 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்:
எச்.எஸ்.ஐ.எல்., கொச்சின் ஷிப்யார்டு, சி.டி.எஸ்.எல்., ஐ.டி.சி., லுாபின்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|