பதிவு செய்த நாள்
29 மார்2018
00:34
கோவை : மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பம்ப் செட் விலையை உயர்த்த, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்க தலைவர், ராஜன் கூறியதாவது: சர்வதேச அளவில், உலோகப் பொருட்களின் விலை ஏறுமுகமாக உள்ளது. அக்டோர் 2017 முதல், பம்ப் செட் உற்பத்திக்கான பல்வேறு உதிரி பாகங்களின் விலை, 10 முதல், 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், மோட்டார் பம்ப் செட் விலையை, 5 முதல், 7 சதவீதம் வரை, உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நலனுக்காக, ‘ஸ்டீல், காப்பர்’ உள்ளிட்ட மூலப்பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கவும், இறக்குமதி செய்யவும் அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் உலோகப் பொருட்களின் விலை, சமநிலையை பெற சில மாதங்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|