பதிவு செய்த நாள்
06 ஏப்2018
02:34
புதுடில்லி;கடந்த நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள், பங்குகளாக மாற்ற இயலாத பத்திரங்கள் மூலமாக, 4,975 கோடி ரூபாயை திரட்டி உள்ளன.இருப்பினும், அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, 83 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என்பது, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி தரும் தகவலின்படி, 2016 – 17ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், 29,558 கோடி ரூபாய் அளவுக்கு, என்.சி.டி., எனும், பங்குகளாக மாற்ற இயலாத பத்திரங்கள் மூலமாக திரட்டி உள்ளன.
நிறுவனங்கள், தங்களது விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காகவும், கடன்களை அடைப்பதற்காகவும், செயல்பாட்டு மூலதன தேவைகள் உள்ளிட்டவைகளுக்காகவும், இத்தகைய பத்திரங்களை வெளியிடுகின்றன. இப்பத்திரங்களை பங்குகளாக மாற்ற முடியாது.
இத்தகைய பத்திரங்கள் வெளியீடு குறைந்ததற்கு முக்கியமான காரணம், தற்போது நிறுவனங்கள் பத்திரங்கள் வெளியீட்டுக்கு பதிலாக, சந்தையில் பங்கு முதலீட்டுக்கு வருவதிலும், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டை ஈர்ப்பதிலும், அதிக ஆர்வம் காட்டியதே என்கின்றனர் வல்லுனர்கள்.கடந்த நிதியாண்டில், நிறுவனங்கள், பங்கு முதலீட்டின் வாயிலாக, 84 ஆயிரம் கோடி ரூபாயையும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீடுகள் மூலம், 62 ஆயிரம் கோடி ரூபாயையும் திரட்டி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|