பதிவு செய்த நாள்
06 ஏப்2018
02:42
புதுடில்லி:‘அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறும், ‘பிளிப்கார்ட், அமேசான்’ நிறுவனங்களால், 6 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என, இந்திய மொபைல்போன் நிறுவனங்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த அமைப்பு, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு அனுப்பியுள்ள கடிதம்:அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறையின், ‘பிரஸ் நோட் 3’ பிரிவு, ஒரு நிறுவனம், பிற நிறுவனங்களுக்கு பொருட்களை விற்பனை செய்யலாம்; ஆனால், நுகர்வோருக்கு பொருட்களை விற்கக் கூடாது என, வலியுறுத்துகிறது.
இந்த விதியை மீறி, அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் மொபைல் போன்களை விற்பனை செய்கின்றன. இந்நிறுவனங்களின் செயல், நாட்டிற்கு எதிரான, பொருளாதார பயங்கரவாத நடவடிக்கை போன்று உள்ளது.
இதனால், கடைகளில் மொபைல்போன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இத்துறையில், 6 கோடி பேர் வேலையிழப்பர். ஆகவே, இவ்விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறலுக்கு இடம் கொடுக்காத வகையில், ‘பிரஸ் நோட் 3’ல் திருத்தங்கள் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|