பதிவு செய்த நாள்
10 ஏப்2018
05:08
புதுடில்லி:‘‘சர்வதேச வர்த்தகத்தில் எழுந்துள்ள சவால்களை, வாய்ப்புகளாக மாற்றி பயன் பெற, இந்தியாவால் முடியும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், இந்திய தொழிலக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசியதாவது:அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக மோதல், சர்வதேச வணிகத்தில், புதிய சவால்களுக்கு வித்திட்டுள்ளது. அவற்றை, எதிர்கொள்வதை தவிர, நமக்கு வேறு வழியில்லை. எனவே, நமக்கே உரித்தான முறையில், சவால்களை சாதகமான போக்குடன் சந்திக்க தயாராக வேண்டும்.சவால்களை, வாய்ப்புகளாக மாற்றி, வர்த்தக மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் நடவடிக்கையில், இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்திய பொருளாதாரம், வரும் ஆண்டுகளில், 5 லட்சம் கோடி டாலராக உயரும்.
ஏற்றுமதியை அதிகரிக்க, பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆப்ரிக்காவுடன், பரஸ்பரம் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. அதுபோல, ஐரோப்பிய கூட்டமைப்புடனும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|