கூடங்குளம் அணு மின் நிலைய திட்டம்:ரிலையன்சுக்கு ரூ.1,081 கோடி, ‘ஆர்டர்’கூடங்குளம் அணு மின் நிலைய திட்டம்:ரிலையன்சுக்கு ரூ.1,081 கோடி, ‘ஆர்டர்’ ... உச்­சத்­தில் கன­காம்­ப­ரம் ஆறு­தல் தந்த மல்லி உச்­சத்­தில் கன­காம்­ப­ரம் ஆறு­தல் தந்த மல்லி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சந்தா கோச்சார் பதவியை பறிக்க திட்டம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2018
05:14

புதுடில்லி;ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்­கு­னர் குழு­வில், பாதி பேர், வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, சந்தா கோச்­சா­ருக்கு எதி­ராக போர்க்­கொடி துாக்கி­யுள்­ள­தால், அவர் பதவி பறிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீடி­யோ­கான் நிறு­வ­னத்­திற்கு அளித்த, 3,250 கோடி ரூபாய் கட­னில், பெரும்­ப­குதி, வாராக் கட­னாக மாறி­யுள்­ளது.
இந்த கட­னுக்கு ஒப்­பு­தல் அளித்­த­தற்கு கைமா­றாக, வீடி­யோ­கான் நிறு­வ­னம், சந்தா கோச்­சார் கண­வர், தீபக் கோச்­சா­ரின் நிறு­வ­னத்­தில், முத­லீடு செய்­த­தாக கூறப்­ப­டு­கிறது.மேலும், ஏழு நிறு­வ­னங்­களின், அன்­னி­யச் செலா­வணி கடன்­களை மறு­சீ­ர­மைக்­கும் பணி, சந்தா கோச்­சா­ரின் மைத்­து­னர் ராஜீவ் கோச்­சா­ரின் நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஏழு நிறு­வ­னங்­களும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கி­யின் கடன் பட்­டி­ய­லில் உள்­ளவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த விவ­கா­ரங்­கள் தொடர்­பாக, தீபக் கோச்­சார், ராஜீவ் கோச்­சார் ஆகி­யோ­ரி­டம், சி.பி.ஐ., விசா­ரணை நடத்தி வரு­கிறது.இந்­நி­லை­யில், ‘சந்தா கோச்­சார் மீது முழு நம்­பிக்கை வைத்­துள்­ளோம்’ என, கடந்த வாரம் தெரி­வித்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்­கு­னர் குழு­வில், தற்­போது பிளவு ஏற்­பட்­டுள்­ளது.
இது குறித்து வங்கி வட்­டா­ரங்­கள் கூறி­ய­தா­வது:வங்கி இயக்­கு­னர் குழு­வில், தலை­வ­ரு­டன் சேர்த்து, 12 பேர் உள்­ள­னர். இதில், ஆறு பேர் தனி இயக்­கு­னர்­கள். இவர்­கள் தான், சந்தா கோச்­சார் பதவி விலக வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.இவர்­க­ளு­டன், மத்­திய அர­சின் நிய­மன உறுப்­பி­ன­ரை­யும் சேர்த்­தால், பெரும்­பான்மை ஆத­ர­வு­டன், சந்தா கோச்­சாரை பதவி நீக்­கம் செய்ய முடி­யும்.இந்த வாரம் இயக்­கு­னர் குழு கூட உள்­ளது. அதில், சந்தா கோச்­சார் பதவி பறிக்­கப்­ப­டுமா என்­பது தெரிய வரும். அதற்கு முன், சந்தா கோச்­சார், பதவி வில­க­வும் வாய்ப்­புள்­ளது.இவ்­வாறு வட்டாரங்கள் கூறி­ன.
புதிய உறுப்பினர் நியமனம்ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்­கு­னர் குழு­வில், மத்­திய அர­சின் நிய­மன இயக்­கு­ன­ராக இருந்­த­வர், அமித் அகர்­வால். இவ­ருக்கு பதி­லாக, நிதிச் சேவை­கள் துறை­யின் இணை செய­லர் லோக் ரஞ்­சன், இயக்­கு­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)