பதிவு செய்த நாள்
10 ஏப்2018
05:14
புதுடில்லி;ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்குனர் குழுவில், பாதி பேர், வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, சந்தா கோச்சாருக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளதால், அவர் பதவி பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீடியோகான் நிறுவனத்திற்கு அளித்த, 3,250 கோடி ரூபாய் கடனில், பெரும்பகுதி, வாராக் கடனாக மாறியுள்ளது.
இந்த கடனுக்கு ஒப்புதல் அளித்ததற்கு கைமாறாக, வீடியோகான் நிறுவனம், சந்தா கோச்சார் கணவர், தீபக் கோச்சாரின் நிறுவனத்தில், முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.மேலும், ஏழு நிறுவனங்களின், அன்னியச் செலாவணி கடன்களை மறுசீரமைக்கும் பணி, சந்தா கோச்சாரின் மைத்துனர் ராஜீவ் கோச்சாரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏழு நிறுவனங்களும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் கடன் பட்டியலில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக, தீபக் கோச்சார், ராஜீவ் கோச்சார் ஆகியோரிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில், ‘சந்தா கோச்சார் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்’ என, கடந்த வாரம் தெரிவித்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்குனர் குழுவில், தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வங்கி வட்டாரங்கள் கூறியதாவது:வங்கி இயக்குனர் குழுவில், தலைவருடன் சேர்த்து, 12 பேர் உள்ளனர். இதில், ஆறு பேர் தனி இயக்குனர்கள். இவர்கள் தான், சந்தா கோச்சார் பதவி விலக வலியுறுத்துகின்றனர்.இவர்களுடன், மத்திய அரசின் நியமன உறுப்பினரையும் சேர்த்தால், பெரும்பான்மை ஆதரவுடன், சந்தா கோச்சாரை பதவி நீக்கம் செய்ய முடியும்.இந்த வாரம் இயக்குனர் குழு கூட உள்ளது. அதில், சந்தா கோச்சார் பதவி பறிக்கப்படுமா என்பது தெரிய வரும். அதற்கு முன், சந்தா கோச்சார், பதவி விலகவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு வட்டாரங்கள் கூறின.
புதிய உறுப்பினர் நியமனம்ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்குனர் குழுவில், மத்திய அரசின் நியமன இயக்குனராக இருந்தவர், அமித் அகர்வால். இவருக்கு பதிலாக, நிதிச் சேவைகள் துறையின் இணை செயலர் லோக் ரஞ்சன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|