பதிவு செய்த நாள்
12 ஏப்2018
00:38
சென்னை:ஜி.எம்.ஆர்., குழுமம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், விமானம் மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மையத்தை அமைக்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில், ஓசூர் – சென்னை இடையே, ராணுவ தொழில் உற்பத்தி பாதை அமைக்கப்படும் என, சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, ஓசூரில், விமான சாதனங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழில் மையத்தை, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து அமைக்க உள்ளோம். இங்கு, உடனடியாக தொழில் துவங்க வசதியாக, 600 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.உள்நாடு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், செய்து தரப்படும்.
பாதுகாப்பு துறைக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஏற்றதாக, இந்த மையம் விளங்கும்.இதன் மூலம், இப்பகுதி குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|