பதிவு செய்த நாள்
18 ஏப்2018
00:12
புதுடில்லி : கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், ஒன்பது நகரங்களில் வீடுகள் விற்பனை, 33 சதவீதம் அதிகரித்திருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘பிராப் டைகர்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த, 2017 – 18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான காலத்தில், மும்பை, சென்னை உள்ளிட்ட ஒன்பது நகரங்களில், வீடுகள் விற்பனை, 33 சதவீதம் ஏற்றம் கண்டு, 80 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில், 59,936 ஆக இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், அதிகபட்சமாக, நொய்டாவில், வீடுகள் விற்பனை, 69 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கடுத்த இடத்தில், குர்கான் உள்ளது. சென்னையில், 25 சதவீதம் விற்பனை உயர்ந்து, 5,075 ஆக அதிகரித்து உள்ளது
கடந்த ஆண்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., போன்றவற்றால், ரியல் எஸ்டேட் துறையில் மந்த நிலை காணப்பட்டது. நான்கு ஆண்டுகளாக விற்பனையில் சரிவை சந்தித்து வந்தாலும், தற்போது விற்பனை அதிகரித்து இருப்பது, இத்துறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|