பதிவு செய்த நாள்
27 ஏப்2018
00:53
கோவை : ‘இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் மட்டுமின்றி, தொழில் முதலீடுகளும் மேம்பட்டு வருகிறது,’’ என, அமெரிக்க துணை துாதர் ராபர்ட் ஜி பர்கஸ் பேசினார்.
கோவையில், இந்திய – அமெரிக்க தொழில் வர்த்தக சபை கூட்டம் நேற்று நடந்தது. வர்த்தக சபை தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதர் ராபர்ட் ஜி பர்கஸ் பேசியதாவது: அமெரிக்கா -– இந்தியா இடையேயான வர்த்தகம், 50 ஆண்டு கால பாரம்பரியமிக்கது. கோவை இதில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே தொழில் முனைவோர் தங்களது வெற்றியை கொண்டாட வேண்டிய காலத்தில் உள்ளோம்.
இரண்டு நாடுகளும் தொடர்ந்து பல்வேறு சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதில் இணைந்து செயலாற்றி வருகின்றன. பயங்கரவாத ஒழிப்பு, எரிசக்தி, சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்தியாவுடனான அமெரிக்காவின் இருதரப்பு வர்த்தகம், 2001ம் ஆண்டில், 4,100 கோடி டாலராக இருந்தது. 2016ம் ஆண்டில் இது, 12 ஆயிரத்து, 500 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியா – அமெரிக்கா நாடுகளிடையே வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. ‘மேக்–இன்–இந்தியா’வாக இருந்தாலும், அமெரிக்காவில் தயாரித்ததாக இருந்தாலும், இருதரப்பு உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரதிநிதிகள் கருத்தரங்கு, ஜூன் 20, 22ல் வாஷிங்டனில் நடக்கிறது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் முதலீடுகள் அதிகரித்துள்ளன. 2016ல் இரு நாடுகள் இடையேயான முதலீடுகள், 4200 கோடி டாலராக உயர்ந்து உள்ளது.கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், அமெரிக்காவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
‘சக்தி சுகர்ஸ்’ தலைவர் மாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய – அமெரிக்க சேம்பர் ஆப் காமர்ஸ் கமிட்டி உறுப்பினர் பத்மநாபன் நன்றி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|