பதிவு செய்த நாள்
30 ஏப்2018
03:23
உலகம் முழுவதும், முதலீட்டிற்கான அடிப்படை விதிகள் எளிமையாக இருப்பதோடு, மீறப்பட முடியாதவையாகவும் இருக்கின்றன. இந்த விதிகளை கடைபிடித்தாலே நீண்ட கால நோக்கில் வளம் பெறலாம். எனினும், பல முதலீட்டாளர்கள் இந்த விதிகளை அலட்சியப்படுத்தி அல்லல்படுகின்றனர். அந்த வகையில், முதலீட்டாளர்கள் பரவலாக செய்யும் தவறுகளை, நிதி ஆலோசகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பிட்காயின் முதலீடு : பரிவர்த்தனை செய்யக்கூடிய, ‘டிஜிட்டல்’ பணமாக பிட்காயின் அமைந்துள்ளது. அண்மை காலத்தில் பிட்காயின் மதிப்பு பல மடங்கு அதிகரித்ததால், முதலீட்டு நோக்கிலும் ஈர்க்கத் துவங்கியது. ஆனால், பிட்காயின் முதலீடு ரிஸ்கானது. பிட்காயின் என்றில்லை, எந்த முதலீட்டிலும், அதன் அடிப்படை புரியாமல் முதலீடு செய்வது ரிஸ்க்.
ஆய்வு தேவைபங்கு முதலீடு நீண்ட கால நோக்கிலானது. நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் பரிந்துரையின் அடிப்படையில், ‘அள்ளித் தரும்’ எனும் நம்பிக்கையில் பங்குகளில் முதலீடு செய்வது சரியல்ல; இது, சூதாட்டத்திற்கு ஒப்பானது. தகுந்த ஆய்வு இல்லாமல், பங்குகளில் நேரடி முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
காப்பீடும் முதலீடும்காப்பீட்டின் முதன்மை நோக்கம் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிப்பதாகும். காப்பீட்டை முதலீட்டுடன் இணைப்பது தவறு. போதுமான காப்பீட்டை உறுதி செய்து, முதலீட்டு உத்தியை தனியே வகுக்க வேண்டும். முதலீட்டு நோக்கில் காப்பீடு பாலிசி வாங்குவதால் இரண்டுக்குமே பாதகம் தான்.
இலக்கு என்ன?எந்த ஒரு முதலீட்டையும் மேற்கொள்ளும் முன், ஒருவர் தன் நிதி இலக்குகள் பற்றி தெளிவாக இருக்க வேண்டும். இலக்குகளுக்கு ஏற்பவே முதலீடு அமைய வேண்டும். இதன் மூலம், நிதி ஒழுக்கத்தையும் கடைபிடிக்கலாம். எனவே, முதலீட்டை தேர்வு செய்யும் முன், நிதி இலக்கை தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டும்.
காத்திருத்தல்பலரும் முதலீட்டின் தேவையை உணர்ந்தாலும், போதிய பணம் இல்லை எனும் காரணத்தை சொல்லி முதலீட்டை தள்ளிப்போடுகின்றனர். இன்னும் சிலர், நிறைய பணம் சேர்ந்த பின், முதலீடு செய்து கொள்ளலாம் என, காத்திருக்கின்றனர். இப்போதே கையில் இருக்கும் தொகைக்கு ஏற்ப முதலீட்டை துவக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|