பதிவு செய்த நாள்
01 மே2018
05:51
திருப்பூர் : வெயிலின் தாக்கத்தால், கறிக்கோழி உற்பத்தி, 25 சதவீதம் குறைந்துள்ளதால், விலை உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில், 26 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. தினமும், 10 லட்சம் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமன்றி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கோடை வெயிலால், கறிக்கோழி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாய்க் கோழிகளின் முட்டை உற்பத்தி குறைந்து, குஞ்சு பொரிப்பு, 10 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், பண்ணைகளில், புதிதாக கோழிக்குஞ்சுகளை விடுவதும் குறைந்து உள்ளது.
கோடை வெயில் காரணமாக, கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிகள் தீவனத்தை அதிகளவு உட்கொள்ளாமல், தண்ணீரை குடிக்கின்றன. இதனால், போதிய எடை இல்லாமல், 15 சதவீதம் வரை உற்பத்தி சரிந்துள்ளது. கோடை விடுமுறை மற்றும் உள்ளூர் பண்டிகை காரணமாக, நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி விலை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை, 53 – 69 ரூபாயாக இருந்தது. ஏப்ரல் துவக்கம் முதல், படிப்படியாக விலை உயர்ந்து, கடந்த மூன்று நாட்களாக, 87 ரூபாயாக உள்ளது. இது, மேலும் உயரும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|