இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்கதுடிக்கும் ஆப்பிள் நிறுவனம்இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்கதுடிக்கும் ஆப்பிள் நிறுவனம் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.53 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.53 ...
தயாரிப்பு துறை வளர்ச்சி தொடருகிறது ஏப்ரலில் புதிய, ‘ஆர்டர்’கள் குவிந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2018
00:12

புதுடில்லி:கடந்த ஏப்­ர­லில், அதிக அள­வில் புதிய, ‘ஆர்டர்’ களும், தேவை­யும் அதி­க­ரித்­த­தால், நாட்­டின் தயா­ரிப்பு துறை, வளர்ச்சி கண்­டுள்­ளது.இது குறித்து, நிக்கி – மார்­கிட் இந்­தியா நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:தயா­ரிப்பு துறை வளர்ச்­சி­யைக் குறிக்­கும்,
என்.ஐ.எம்.பி.எம்.ஐ., குறி­யீடு, ஏப்­ர­லில், 51.6 புள்­ளி­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, மார்ச்­சில், 51 புள்­ளி­யாக இருந்­தது.இக்­கு­றி­யீடு, 50 புள்­ளி­க­ளுக்கு மேல் இருந்­தால், வளர்ச்­சி­யைக் குறிக்­கும். இந்த வகை­யில், நாட்­டின் தயா­ரிப்பு துறை, தொடர்ந்து ஒன்­பது மாதங்­க­ளாக வளர்ச்சி கண்டு வரு­கிறது.விலை உயர்வுஏப்­ர­லில், பொருட்­க­ளுக்­கான தேவைப்­பாடு அதி­க­ரித்து காணப்­பட்­டது. அதற்­கேற்ப, தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு, அதிக அள­வில், புதிய ஆர்­டர்கள் குவிந்­தன.
சில்­லரை பண­வீக்­கம், இரண்­டா­வது மாத­மாக குறைந்து இருந்­தது. கடந்த ஆண்டு, ஜூலை, செப்., முதல், மூலப்­பொ­ருட்­கள் விலை, சொற்­ப­மாக உயர்ந்து வரு­கிறது. அதே அள­வில், பொருட்­கள் விலை­யும் உயர்ந்­துஉள்­ளது.தயா­ரிப்பு துறை­யில், மூன்று முக்­கிய பிரி­வு­களில், நுகர்­வோர் சாத­னங்­கள் பிரிவு மிக வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. புதிய ஆர்­டர்­க­ளால், இப்­பி­ரிவு நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.
நிறு­வ­னங்­கள், மூலப் பொருட்­களை அதிக அள­வில் கொள்­மு­தல் செய்­வ­தில் ஈடு­பட்­டுள்ளன.வட்டி குறையவில்லைஅதே­ச­ம­யம், இயந்­தி­ரங்­கள் உள்­ளிட்ட, முத­லீட்டு சாத­னங்­கள் பிரி­வின் வளர்ச்சி சரி­வ­டைந்­துள்­ளது. இப்­பி­ரி­வில், உற்­பத்தி மட்­டு­மின்றி, புதிய ஆர்­டர்­கள் வரத்­தும், ஏப்­ர­லில் குறைந்­துள்­ளது.கடந்த ஆண்டு, ஜூலை­யில், ஜி.எஸ்.டி., அறி­மு­க­மான பின், வர்த்­த­கம் குறித்த நிறு­வ­னங்­களின் நம்­பிக்கை அதி­க­ரித்­துஉள்­ளது.
அடுத்த ஓராண்­டில், பொருட்­க­ளுக்­கான தேவை மேலும் அதி­க­ரிக்­கும் என, நிறு­வ­னங்­கள் எதிர்­பார்க்­கின்றன. அதன் விளை­வாக, புதிய ஆர்­டர்­கள் குவி­யும் என, நிறு­வ­னங்­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.இத­னி­டையே, சில்­லரை பண­வீக்­கம் குறைந்­துள்­ள­தால், ரிசர்வ் வங்கி, ஜூன், 6ல் வெளி­யிட உள்ள நிதிக் கொள்­கை­யில், 'ரெப்போ' வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு 2018- – 19ம் நிதி­யாண்­டின், முதல் நிதிக் கொள்கை அறி­விப்பை, ஏப்., 6ல் வெளி­யிட்­டது. அதில், வங்­கி­க­ளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்­கும், 'ரெப்போ' வட்டி, மாற்­ற­மின்றி, 6 சத­வீ­த­மாக தொட­ரும் என, தெரி­விக்­கப்­பட்­டது.கடந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல், தொடர்ந்து நான்கு முறை வெளி­யான ரிச­ர்வ் நிதிக் கொள்­கை­யில், ‘ரெப்போ’ வட்­டி­கு­றைக்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­தாண்­டின், முதல் காலாண்­டில், தயா­ரிப்பு துறை­யின் வளர்ச்சி வலு­வாக இருந்­தது. எனி­னும், மார்ச்­சில், வளர்ச்சி விகி­தம், முந்­தைய ஐந்து மாதங்­களில் இல்­லாத அள­விற்கு குறைந்து காணப்­பட்­டது. ஆனால், ஏப்­ர­லில், தேவை அதி­க­ரித்­த­தால், வளர்ச்சி விகி­தம் சிறப்­பாக உள்­ளது.
ஆஷ்னா தோதியா பொருளாதார நிபுணர்,
ஐ.எஸ்.எஸ்.மார்கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)