பதிவு செய்த நாள்
06 மே2018
00:22
சேலம்:பட்டாணி இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளதால், அதன் விலை உயர்ந்து, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்தியாவின் பட்டாணி தேவையில், 60 சதவீதம், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலமும், மீதி, 40 சதவீதம் உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திர மாநில உற்பத்தி மூலமும் பூர்த்தி செய்யப்படுகிறது.
கடந்த, 2015ல், அதன் இறக்குமதி அதிகரித்ததால், உரிய விலை கிடைக்காமல், பயிரிடும்
பரப்பை, விவசாயிகள் குறைத்து வந்தனர். அதேநிலை, 2016 – 17ல் தொடர்ந்தது.இது குறித்து, மாநில அரசுகள், மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்றதால், விவசாயிகள் நலனுக்கு, வெளிநாடுகளிலிருந்து, பட்டாணியை இறக்குமதி செய்ய, மத்திய அரசு தடை விதித்தது.
இதனால், மார்க்கெட்டில் அதன் விலை நேற்று, கிலோவுக்கு, ஆறு முதல், 10 ரூபாய் வரை உயர்ந்தது.
அதன் விபரம்:
வெள்ளை பட்டாணி முதல் ரகம் கிலோ, 36க்கு விற்றது, 42 ரூபாய்; இரண்டாம் ரகம், 32க்கு விற்றது, 38 ரூபாயாக உயர்ந்தது. பச்சை பட்டாணி முதல் ரகம், 46க்கு விற்றது, 56 ரூபாய்; இரண்டாம் ரகம், 42க்கு விற்றது, 52 ரூபாயாக உயர்ந்தது.பட்டாணி பருப்பு முதல் ரகம், 46க்கு விற்றது, 54 ரூபாய், இரண்டாம் ரகம், 42க்கு விற்றது, 50 ரூபாயாக உயர்ந்தது. ஆனால், மார்க்கெட்டுகளுக்கு வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.இறக்குமதி தடையால், பட்டாணி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|