தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ... காப்­பீடு பாலிசி விற்­ப­னையில்  அறிய வேண்­டிய உத்­திகள்  காப்­பீடு பாலிசி விற்­ப­னையில் அறிய வேண்­டிய உத்­திகள் ...
பட்டாணி இறக்குமதிக்கு அரசு தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2018
00:22

சேலம்:பட்­டாணி இறக்­கு­ம­திக்கு, மத்­திய அரசு தடை விதித்­துள்­ள­தால், அதன் விலை உயர்ந்து, விவ­சா­யி­கள் மகிழ்ச்சி அடைந்­து உள்­ள­னர்.

இந்­தி­யா­வின் பட்­டாணி தேவை­யில், 60 சத­வீ­தம், கனடா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வ­தன் மூல­மும், மீதி, 40 சத­வீ­தம் உத்­தர பிர­தே­சம், மஹா­ராஷ்­டிரா, மத்­திய பிர­தே­சம், கர்­நா­டகா, ஆந்­திர மாநில உற்­பத்தி மூல­மும் பூர்த்தி செய்­யப்­ப­டு­கிறது.

கடந்த, 2015ல், அதன் இறக்­கு­மதி அதி­க­ரித்­த­தால், உரிய விலை கிடைக்­கா­மல், பயி­ரி­டும்
பரப்பை, விவ­சா­யி­கள் குறைத்து வந்­த­னர். அதே­நிலை, 2016 – 17ல் தொடர்ந்­தது.இது குறித்து, மாநில அர­சு­கள், மத்­திய அர­சின் பார்­வைக்கு எடுத்­துச் சென்­ற­தால், விவ­சா­யி­கள் நல­னுக்கு, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து, பட்­டா­ணியை இறக்­கு­மதி செய்ய, மத்­திய அரசு தடை விதித்­தது.
இத­னால், மார்க்­கெட்­டில் அதன் விலை நேற்று, கிலோ­வுக்கு, ஆறு முதல், 10 ரூபாய் வரை உயர்ந்­தது.


அதன் விப­ரம்:


வெள்ளை பட்­டாணி முதல் ரகம் கிலோ, 36க்கு விற்­றது, 42 ரூபாய்; இரண்­டாம் ரகம், 32க்கு விற்­றது, 38 ரூபா­யாக உயர்ந்­தது. பச்சை பட்­டாணி முதல் ரகம், 46க்கு விற்­றது, 56 ரூபாய்; இரண்­டாம் ரகம், 42க்கு விற்­றது, 52 ரூபா­யாக உயர்ந்­தது.பட்­டாணி பருப்பு முதல் ரகம், 46க்கு விற்­றது, 54 ரூபாய், இரண்­டாம் ரகம், 42க்கு விற்­றது, 50 ரூபா­யாக உயர்ந்­தது. ஆனால், மார்க்­கெட்­டு­க­ளுக்கு வரத்து தொடர்ந்து சரிந்து வரு­வ­தால், விலை மேலும் உயர வாய்ப்­புள்­ள­தாக வியா­பா­ரி­கள் தெரி­வித்­த­னர்.இறக்­கு­மதி தடை­யால், பட்­டாணி விலை உயர்ந்­துள்­ள­தால், விவ­சா­யி­கள் மகிழ்ச்சியடைந்­து உள்­ள­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)