பதிவு செய்த நாள்
07 மே2018
00:41
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, தொடர்ந்து நான்காவது வாரமாக உயர்ந்து வருகிறது. குறைந்தபட்ச அளவில் இருந்து, 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, தற்போது, 10,564 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது.சர்வதேச சந்தைகளும் சில நாட்களாக உயர்ந்து வருகின்றன. அமெரிக்கா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான அணு ஆயுதங்கள் குறித்த பிரச்னைகளின் தீவிரம், தற்போது குறைந்து வரும் நிலையில், அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் எனவும், வரும் காலகட்டத்தில், அமெரிக்க வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனங்களின், நான்காம் காலாண்டு நிதி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில், பல முன்னணி நிறுவனங்களின் அறிக்கைகள், எதிர்பார்த்தது போலவே அமைந்ததால், பங்குகள் விலை உயர்ந்தன. ஆசியா மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி விகிதம், இந்த ஆண்டு, 4.7 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு, 4.9 சதவீதமாகவும், 2020ல், 5 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, 1 பேரல், 70 டாலரை நெருங்கியது. உலகளவில், கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் என்றும், இதனால் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த வாரத்தைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டியின் அடுத்த இலக்கு, 10,760 ஆகும். இதை கடக்கும் நிலையில், 10,830 அடுத்த ரெசிஸ்டென்ஸ் ஆகும். இந்நிலையில், முதல் சப்போர்ட், 10,465 இரண்டாவது சப்போர்ட், 10,350 ஆகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|