பதிவு செய்த நாள்
16 மே2018
00:42
புதுடில்லிபொது துறையைச் சேர்ந்த, பஞ்சாப் நேஷனல் வங்கி, 2017 – -18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், நிகர அளவில், 13,416.91 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது. இவ்வங்கி, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 261.90 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது.
இதே காலத்தில், வாராக் கடன், 12.5 சதவீதத்தில் இருந்து, 18.38 சதவீதமாக உயர்ந்துள்ளது.வாராக் கடன் உள்ளிட்டவற்றுக்கான, இவ்வங்கியின் ஒதுக்கீடு, மூன்று மடங்கு உயர்ந்து, 5,753 கோடியில் இருந்து, 16,202 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருவாய், 16.8 சதவீதம் குறைந்து, 3,683 கோடியில் இருந்து, 3,063 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
கடந்த 2017 -– 18ம் நிதியாண்டில், இவ்வங்கி, 12,130 கோடி ரூபாய், நிகர இழப்பை கண்டுள்ளது. இவ்வங்கி, 2016 – -17ம் நிதியாண்டில், 1,187 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்ததுநிரவ் மோடி, மெகுல்சோக்சி ஆகியோர், இவ்வங்கியில், 13ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|