கயிறு ஏற்றுமதி ரூ.2,200 கோடி; மத்திய அமைச்சர் பெருமிதம்கயிறு ஏற்றுமதி ரூ.2,200 கோடி; மத்திய அமைச்சர் பெருமிதம் ... தமிழகத்தில் கூடுதலாக 7 இடங்களில் ‘இ – நாம்’ஆன்லைன் விற்பனை சந்தை தமிழகத்தில் கூடுதலாக 7 இடங்களில் ‘இ – நாம்’ஆன்லைன் விற்பனை சந்தை ...
நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும்; கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2018
01:43

புதுடில்லி : கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை அதி­க­ரிக்­கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஒரு நாட்­டின் ஏற்­று­ம­தியை விட, இறக்­கு­மதி மதிப்பு அதி­க­மாக இருந்­தால், நடப்பு கணக்­கில் பற்­றாக்­குறை உண்­டா­கும். இத­னால், ஏற்­று­மதி மூலம் ஒரு நாடு பெறும் வரு­வாயை விட, இறக்­கு­ம­திக்­காக, வெளி­நா­டு­க­ளுக்கு அதிக தொகை அளிக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

அமெரிக்கா:
இது குறித்து, சர்­வ­தேச நிதிச் சேவை­கள் நிறு­வ­ன­மான, ‘கோல்­டு­மென் சாக்ஸ்’ வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: ஒரு பேரல் கச்சா எண்­ணெய், 80 டாலரை எட்­டி­யுள்­ளது. 2014, நவம்­ப­ருக்கு பின், இந்த அள­விற்கு விலை உயர்ந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஈரான் உட­னான, அணு ஆயுத ஒப்­பந்­தத்­தில் இருந்து, அமெ­ரிக்கா வெளி­யே­றி­யுள்­ள­தால், கச்சா எண்­ணெய் விலை, வரும் மாதங்­களில் மேலும் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இது, அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை உயர்­வுக்கு வழி வகுக்­கும். இத­னால், பண­வீக்­கம் அதி­க­ரிக்­கும். கச்சா எண்­ணெய் விலை, 10 சத­வீ­தம் உயர்ந்­தால், பண­வீக்­கம், 0.10 சத­வீ­தம் உய­ரும்.

இத்­த­கைய அம்­சங்­களின் அடிப்­ப­டை­யில், 2018- – 19ம் நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, முந்­தைய மதிப்­பீட்டை விட, 0.3 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2.1 சத­வீ­தத்­தில் இருந்து, 2.4 சத­வீ­த­மாக உய­ரும்.

ரூபாய் மதிப்பு:
கடந்த, 2017 -– 18ம் நிதி­யாண்­டில், அக்., – டிச., வரை­யி­லான காலாண்­டில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 2 சத­வீ­த­மாக, அதா­வது, 1,350 கோடி டால­ராக அதி­க­ரித்து காணப்­பட்­டது. இது, 2016 – -17ம் நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், 800 கோடி டால­ராக இருந்­தது.

கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், நடப்பு நிதி­யாண்­டில், நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், சரா­ச­ரி­யாக, 5.3 சத­வீ­த­மாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஓராண்­டில், டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, 6.6 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. இதன் கார­ண­மா­க­வும், நடப்பு கணக்கு மற்­றும் நிதிப் பற்­றாக்­குறை அதி­க­ரிக்­கும். எனி­னும், ரிசர்வ் வங்கி, ஜூன், 6ல் வெளி­யிட உள்ள நிதிக் கொள்­கை­யில், ‘ரெப்போ’ வட்டி விகி­தத்­தில் மாற்­றம் செய்­யாது; ஆகஸ்­டில் மாற்­றம் செய்ய வாய்ப்பு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

1 டாலர் உயர்ந்தால் :
இந்­தி­யா­வின், கச்சா எண்­ணெய் தேவை­யில், 80 சத­வீ­தம், இறக்­கு­மதி மூலம் பூர்த்தி செய்து கொள்­ளப்­ப­டு­கிறது. நாட்­டின் மொத்த இறக்­கு­மதி மதிப்­பில், கச்சா எண்­ணெய் மற்­றும் பெட்­ரோ­லி­யப் பொருட்­கள், 40 சத­வீத பங்கை கொண்­டுள்ளன.

கடந்த நிதி­யாண்­டில், ஏப்., – பிப்­ர­வரி வரை, 6,350 கோடி டாலர் மதிப்­பில், 19.57 கோடி டன் கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதே காலத்­தில் இறக்­கு­ம­தி­யான, 1 பேரல் கச்சா எண்­ணெ­யின் சரா­சரி விலை, 55.74 டால­ராக இருந்­தது. கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­தியை பொறுத்­த­வரை, 1 பேர­லுக்கு, 1 டாலர் உயர்ந்­தால் கூட, இறக்­கு­மதி செல­வி­னத்­தில், 823 கோடி ரூபாய் உய­ரும். தற்­போது, 1 பேரல் இறக்­கு­மதி கச்சா எண்­ணெ­யின் சரா­சரி விலை, 72 டால­ராக உயர்ந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)