தமிழகத்தில் கூடுதலாக 7 இடங்களில் ‘இ – நாம்’ஆன்லைன் விற்பனை சந்தைதமிழகத்தில் கூடுதலாக 7 இடங்களில் ‘இ – நாம்’ஆன்லைன் விற்பனை சந்தை ... ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் ...
எரிபொருள் விலை உயர்வால் மாற்றம் : சாண எரிவாயு திட்டத்திற்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2018
02:17

மண்­ணெண்­ணெய், சமை­யல் எரி­வாயு உள்­ளிட்ட எரி­பொ­ருட்­கள் விலை உயர்­வால், சாண எரி­வாயு திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வ­தில், சேலம் மாவட்ட கிராம மக்­கள் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர். சமீ­ப­கா­ல­மாக, ‘காஸ்’ சிலிண்­டர் பெறு­வ­தில் பெரும் சிக்­கல் ஏற்­ப­டு­கிறது. மாற்று எரி­பொ­ரு­ளான மண்­ணெண்­ணெ­யும், நியாய விலை கடை­களில் குறைந்த அள­விற்கே வழங்­கப்­ப­டு­கிறது. விறகு விலை­யும் உச்­சத்­திற்கு சென்று விட்­டது. மின்­சார அடுப்பை பயன்­ப­டுத்த முடி­யாத அள­விற்கு, கிரா­மப்­பு­றங்­களில் அடிக்­கடி மின்தடை ஏற்­ப­டு­கிறது.இந்த சிக்­கலை சமா­ளிக்க உத­வும் வகை­யில், 1981 – 82ல், மத்­திய அர­சின், கதர் மற்­றும் கிராம தொழில்­கள் ஆணை­யத்­தால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சாண எரி­வாயு திட்­டம் தற்­போது, புத்­து­யிர் பெற்று வரு­கிறது. சேலம் மாவட்­டத்­தில், ஆத்­துார், கெங்­க­வல்லி, தலை­வா­சல், வாழப்­பாடி உள்­ளிட்ட பகு­தி­களில், கிராம மக்­கள், சாண எரி­வா­யுவை பயன்­ப­டுத்த துவங்கி உள்­ள­னர்.இது குறித்து, அம்­மம்­பா­ளை­யத்­தைச் சேர்ந்த விவ­சாயி ராஜேந்­தி­ரன் கூறி­ய­தா­வது:கடந்த, 1986 – 87ல், 40 ஆயி­ரம் ரூபாய் செல­வில், சாண எரி­வாயு கலன் அமைத்­தேன். அரசு மானி­ய­மாக, 3,000 ரூபாய் கொடுத்­த­து.சாண எரி­வாயு கல­னி­லி­ருந்து வெளி­யே­றும் கழிவு, சிறந்த உர­மாக பயன்­ப­டு­கிறது. சில ஆண்­டு­க­ளாக இவற்றை பயன்­ப­டுத்­தா­மல் விட்­ட­தால், ஆண்­டுக்கு, 6,000 முதல், 9,000 ரூபாய் வரை, காஸ் சிலிண்­டர் வாங்கி வந்­தேன்.தற்­போது, சாண எரி­வாயு பயன்­ப­டுத்­து­வ­தால், அந்த செலவு மீத­மா­கிறது. இந்த சாண எரி­வாயு கல­னில் விபத்து ஏற்­பட வாய்ப்பு இல்லை என்­ப­தால், கிரா­மப்­புற மக்­கள், இந்த கலன் அமைக்க அதிக ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர்.இவ்­வாறு அவர் கூறி­னார்.சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்­கு­னர் அருள்­ஜோதி அர­சன் கூறி­ய­தா­வது:சேலம் மாவட்­டத்­தில், 16 ஆயி­ரம் சாண எரி­வாயு கலன்­கள் அமைக்­கப்­பட்­டுள்ளன. காஸ் சிலிண்­டர் வரு­கைக்கு பின், சாண எரி­வாயு பயன்­பாடு குறைந்­து­விட்­டது.சாண எரி­வாயு கலன் அமைக்க, தேசிய கரிம எரி­வாயு மற்­றும் இயற்கை உரம் மேலாண்மை திட்­டத்­தின் கீழ், அரசு மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது.மூன்று முதல், நான்கு மாடு­கள் வைத்­துள்ள விவ­சா­யி­கள், இத்­திட்­டத்தை எளி­தாக செயல்­ப­டுத்த முடி­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)