பதிவு செய்த நாள்
24 மே2018
10:57
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மே 24) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இந்திய நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் ரூபாய் மதிப்பின் உயர்வு காரணமாக சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி உள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 152.81 புள்ளிகள் உயர்ந்து 34,497.72 புள்ளிகளாகவும், நிப்டி 38.15 புள்ளிகள் உயர்ந்து 10,468.50 புள்ளிகளாகவும் உள்ளன. ஐடி, சுகாதாரத்துறை, மின்துறை, வங்கித்துறை உள்ளிட்ட துறை நிறுவனங்களின் பங்குகள் 1.77 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
இன்போசிஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், எச்டிஎப்சி லிமிடெட், பாரதி ஏர்டெல், கோல் இந்தியா, விப்ரோ, யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.38 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|