பதிவு செய்த நாள்
29 மே2018
03:36
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை செட் பகுதியில், திங்கள், வியாழக்கிழமைகளில் வாழைப்பழ சந்தை நடக்கிறது. இங்கிருந்து சேலம், கோவை, ஈரோடு, தஞ்சாவூர், காரைக்குடி பகுதிகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்ல குவிந்துவிடுவர்.
கடந்தாண்டு மழை இல்லாததால், சிறுமலை வாழை விளைச்சல் பாதித்தது. சந்தைக்கு வழக்கமாக, 1,000 கிலோ சிறுமலை வாழைப்பழம் வரத்து இருக்கும். நேற்று, 600 கிலோ மட்டும் வந்தது. அதனால், ஒரு மணி நேரத்தில் விற்றுவிட்டது.
இது குறித்து வியாபாரி சையது இப்ராகிம் கூறுகையில், ‘‘திருமண முகூர்த்தங்கள் தொடர்ந்து வருவதால், சிறுமலை பழத்திற்கு தேவை அதிகமாக உள்ளது. அதற்கேற்ப வரத்து இல்லாததால், ஒரு பழத்தை, 12 ரூபாய் என, விற்கிறோம். வரத்து அதிகரித்தால், விலை குறையும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|