பதிவு செய்த நாள்
29 மே2018
03:37
சென்னை : மாதக் கடைசியில், காய்கறி விலைகள் அதிக ஏற்றமில்லாமல் விற்பனையாகின.
கோயம்பேடு காய்கறி மொத்த விலை சந்தையில், காய்கறி வரத்து குறைவாகவே காணப்பட்டது. மாதக் கடைசி என்பதால், விற்பனை குறைந்திருப்பதால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதிகபட்சமாக பச்சை பட்டாணி விலை, 1 கிலோ, 130 ரூபாயாக உள்ளது. இஞ்சி விலை மீண்டும் சதத்தை எட்டும் வகையில் நேற்று, 1 கிலோ இஞ்சி, 90 ரூபாய்க்கு விற்பனையானது. ஏழு ரூபாய்க்கு விற்பனையான காலிபிளவர், 25 – 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் விலை சற்று குறைந்து, 48 – 50 ரூபாயாக இருந்தது. மொத்த விலையில் மற்ற காய்கறிகளின், 1 கிலோவுக்கான விலை:
வெங்காயம் ரூ.18தக்காளி ரூ.10உருளைக்கிழங்கு ரூ.25சேப்பங் கிழங்கு, கேரட் ரூ.30சவ்சவ், பாகற்காய், முருங்கை ரூ.25பீட்ரூட், கொத்தவரை, புடலை ரூ.20கோவக்காய் ரூ.18முள்ளங்கி ரூ.15வாழைக்காய் ரூ.7பச்சை மிளகாய் ரூ.30
திருப்பதி ஈச்சம் பழம்:
சென்னையில், நாவல் பழத்துடன், ஈச்சம் பழம் விற்பனையும் துவங்கியுள்ளது. தற்போது, மாம்பழ சீசன் களை கட்டியுள்ள நிலையில், அதன் விலை கடந்த வார நிலையிலேயே உள்ளது. ஒரு கிலோ பங்கனப்பள்ளி, 40 – 60 ரூபாயாக உள்ளது. சாத்துக்குடி, 60 – 80 ரூபாயாக உள்ளது. திருப்பதியில் இருந்து வந்துள்ள ஈச்சம் பழம், 1 கிலோ 100 – 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
சர்க்கரை விலை, ‘விர்’:
கொத்தவால்சாவடி உணவு தானிய விற்பனை சந்தையில், முந்தைய வாரத்தைக் காட்டிலும், சர்க்கரை, பச்சைப் பட்டாணி விலை ஏறுமுகத்தில் செல்லத் துவங்கியுள்ளது. சர்க்கரை, 50 கிலோ மூட்டை விலை, 1,530 ரூபாயாக உள்ளது; இதற்கு முன், 1,480 ரூபாயாக இருந்தது. 48 ரூபாயாக இருந்த பச்சைப்பட்டாணி விலை, 64 – 65 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சகாய விலையில் மலர்கள் :
பாரிமுனை மலர் விற்பனை அங்காடிகளில் நேற்று மல்லி, முல்லை வரத்து அதிகம் காணப்பட்டது. பவுர்ணமியை தொடர்ந்து, வில்வம், தாமரை, கருங்குவளை, செண்பக மலர்களும் விற்பனைக்கு அதிகம் வந்திருந்தன.
மல்லி, 1 கிலோ, 120 – 200 ரூபாய் வரை விற்பனையானது. கனகாம்பரம், 1 கிலோ, 300 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா, 1 கிலோ, 40 ரூபாய்க்கும், மற்ற ரோஜா வகைகள், 1 கிலோ, 20 – 60 ரூபாய்க்கும் விற்பனையாகின.
முல்லை, 1 கிலோ, 200 – 300 ரூபாய்க்கும், சம்பங்கி, 1 கிலோ, 20 ரூபாய்க்கும் விற்பனையாகின. பெங்களூரு ரோஜா ஒரு கட்டு, 20 – 40 ரூபாய்க்கு விற்பனையானது. தாமரை ஒன்று இரண்டு ரூபாய்க்கும், வில்வம், கருங்குவளை, செண்பக மலர்கள், 100 கிராம் 10 – 20 ரூபாய்க்கும் விற்பனையாகின.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|