பதிவு செய்த நாள்
29 மே2018
03:39
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, போர் கப்பல் தயாரிப்பு நிறுவனமான, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், பங்கு வெளியீட்டிற்கு, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனத்தில் மத்திய அரசு வைத்துள்ள பங்குகளில், 17.5 சதவீதம் விற்பனை செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை, ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் அண்ட் செக்யூரிட்டிஸ் மற்றும் யெஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனங்கள் ஏற்றுள்ளன. விரைவில், பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.
இம்மாத துவக்கத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, செபி ஒப்புதல் அளித்தது. இந்தியன் ரினீவபிள் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜன்சி, ரைட்ஸ் ஆகிய நிறுவனங்களில், மத்திய அரசு பங்கு மூலதனத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கும், செபி ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தாண்டு, தற்போது வரை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் டைனமிக்ஸ், மிஷ்ரா தத்து நிகாம் ஆகிய நிறுவனங்களில், மத்திய அரசு, குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|