பதிவு செய்த நாள்
05 ஜூன்2018
01:52
புதுடில்லி:ஜப்பானைச் சேர்ந்த, சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்தியாவில், இரண்டு கோடி கார்களை தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளது.குஜராத் தொழிற்சாலையில் உருவான, புதிய, ‘ஸ்விப்ட்’ இரண்டு கோடியை எட்டிய கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது.இது குறித்து, சுசூகி மோட்டார் கார்ப்., வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனம், இந்தியாவில் மாருதி உத்யோக் நிறுவனத்துடன் இணைந்து, 1983, டிசம்பரில், கார் தயாரிப்பில் இறங்கியது.
முதன் முதலாக, ‘மாருதி 800’ கார் அறிமுகமானது.அது முதல், 34 ஆண்டுகள் மற்றும், 5 மாதங்களில், நிறுவனம், இரண்டு கோடி கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது.ஜப்பானில் இதே சாதனையை படைக்க, நிறுவனம், 45 ஆண்டுகள் மற்றும், 9 மாதங்களை எடுத்துக் கொண்டது. இந்தவகையில், இந்திய தயாரிப்பில், நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.தற்போது, கூர்கான், மானேசர் மற்றும் குஜராத் ஆலைகளில் ‘ஆல்டோ, டிசையர், பலேனோ, ஸ்விப்ட், வேகன் ஆர், விட்டாரா பிரெஸ்ஸா’ உட்பட, 16 வகை கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், 17.80 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில், 16.50 லட்சம் கார்கள் உள்நாட்டிலும், 1.30 லட்சம் கார்கள் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா உட்பட, 100க்கும் அதிகமான நாடுகளுக்கு, கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பங்கு
சுசூகி மோட்டார் கார்ப்., மாருதி சுசூகியில், 56.21 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. இது தவிர, மாருதி சுசூகி நிறுவனத்திற்கு மட்டும் வாகனங்களை தயாரித்து தரும், சுசூகி மோட்டார் குஜராத் நிறுவனத்திலும், 100 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|