செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது ... வங்­கி­களை கண்­கா­ணிப்­பது யார் பொறுப்பு? வங்­கி­களை கண்­கா­ணிப்­பது யார் பொறுப்பு? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
07:01

தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான நிப்டி, கடந்த நான்கு வாரங்­க­ளாக உயர்ந்து வரு­கிறது. இருப்­பி­னும், அதிக அள­வி­லான ஏற்­றத்­தாழ்வு காணப்­ப­டு­கிறது.

தற்­போ­தைய நிலை­யில், நிப்­டி­யின் தின­சரி வர்த்­தக முடிவு, 10,930 புள்­ளி­க­ளுக்கு மேல் வரும் எனில், மீண்­டும் சந்தை புதிய உச்­சத்தை எட்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கடந்த வாரம், தொழில்­நுட்ப துறை மற்­றும் மருந்து துறை பங்­கு­கள், சந்­தை­யின் முன்­னேற்­றத்­துக்கு சாத­க­மாக இருந்­தன. இன்­போ­சிஸ், டி.சி.எஸ்., பங்­கு­கள், புதிய உச்­சத்தை எட்­டின. மேலும், டால­ருக்கு எதி­ரான ரூபா­யின் மதிப்பு சரிவு கார­ண­மாக, இந்­நி­று­வ­னங்­க­ளின் வெளி­நாட்டு ஆதா­யம் அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில் பங்­கு­கள் விலை உயர்ந்­தன.

அமெ­ரிக்கா, கடந்த வாரம் வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீ­தம் அள­வுக்கு உயர்த்­தி­ய­தன் விளை­வாக, டாலர் மதிப்பு அதி­க­ரித்து, ரூபா­யின் மதிப்பு சரி­யத் துவங்­கி­யது. மேலும், அமெ­ரிக்­கா­வின் மருத்­து­வம் தொடர்­பான இறக்­கு­மதி விதி­களில், இந்த நிறு­வ­னங்­க­ளுக்கு சாத­க­மான கொள்கை முடிவு எடுத்­த­தும் உயர்­வுக்கு கார­ண­மா­கி­யது.

பொதுத்­துறை வங்­கி­கள், கச்சா எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் பங்­கு­கள், சரி­வில் வர்த்­த­க­மா­கின. எண்­ணெய் விலை, 1 பேர­லுக்கு, 8 டாலர் சரிந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. பரஸ்­பர நிதி மூல­மாக, இந்­தி­யர்­கள் அதிக அள­வில் மறை­மு­க­மாக பங்­குச் சந்­தை­யில் முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். ஏப்­ரல் மாதத்தை விட, மே மாதத்­தில், 9 சத­வீ­தம் அதி­க­ரித்து, 7,304 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. எஸ்.ஐ.பி., முறை­யில் முத­லீடு செய்­யும் திட்­டத்­தில், 2014 மார்ச்­சில், 1,206 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்­டது. அதுவே, 2016 மார்ச்­சில், 2,179 கோடி­யா­க­வும், 2018 மே மாதத்­தில், 7,304 கோடி­யா­க­வும் உயர்ந்­து உள்­ளது. இது மிகப் பெரிய மாற்­ற­மா­கும்.

இத்­திட்­டத்­தின் கீழ் கடந்த நிதி­யாண்­டில் மட்­டும், 67 ஆயி­ரத்து, 190 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீடு செய்­யப்­பட்­டது. இது, அதற்கு முந்­தைய நிதி­யாண்­டில், 43 ஆயி­ரத்து, 921 கோடி ரூபா­யாக இருந்­தது. ஆக, 53 சத­வீ­தம் அள­வுக்கு முத­லீடு அதி­க­ரித்­தது, பங்­குச் சந்­தைக்கு சாத­க­மாக அமைந்து வரு­கிறது. இதன் அடிப்­ப­டை­யில், இந்த வாரத்தை பொறுத்­த­வரை ரெசிஸ்­டென்ஸ், 10,930, 11,170 ஆகும். சப்­போர்ட், 10,750, 10,670 ஆகும்.

கவ­னிக்க வேண்­டிய பங்­குகள் :
ஏ.சி.இ., இன்­போ­சிஸ், ஐ.டி.சி., இன்ட்­ரா­சாப்ட், குஜ­ராத் ஸ்டேட் பெர்ட்­டி­லை­சர்ஸ்

-முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)