பதிவு செய்த நாள்
19 ஜூன்2018
06:13
சென்னை : அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில், 21ம் தேதி முதல் 25 வரை, சர்வதேச, ‘மிஷின் டூல்ஸ்’ கண்காட்சி நடக்க உள்ளது.
தொழில்முனைவோர், உலகமெங்கும் உள்ள, மிஷின் டூல்ஸ் மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் உள்ள வளர்ச்சியை அறியும் வகையில், அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், கண்காட்சி நடக்க உள்ளது.
முக்கியத்துவம் :
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 21ம் தேதி முதல் 25 வரை, கண்காட்சி நடக்கிறது. கண்காட்சி குறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தைச்சேர்ந்த அய்யப்பன், ரவி உள்ளிட்டோர் கூறியதாவது: ‘தொழில் துறை, 4.0’ என்பதே இன்றைய தேவை. எனவே, செலவை குறைத்தல், துல்லியம், நேரத்தையும், சக்தியையும் சேமித்தல், ரோபோடிக்ஸ் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆட்டோ பாகங்கள், மிஷின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, கன்ட்ரோல் சிஸ்டம், தகவல் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. தைவான், கொரியா போன்ற, 28 நாடுகளின் தொழில்நுட்பங்கள் இடம் பெறுகின்றன. கண்காட்சியை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
எதிர்பார்ப்பு :
தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், அவர்களின் செயல்திட்டங்களுக்கு, கண்காட்சியில் இலவசமாக இடம் வழங்கப்படுகிறது. கடந்த, 1994ல் நடத்தப்பட்ட முதல் கண்காட்சியில், நான்கு கோடி ரூபாயும், கடைசியாக, 2016ல் நடந்த கண்காட்சியில், 450 கோடி ரூபாய் அளவிலும், வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது, இந்தாண்டு நடக்கும் கண்காட்சியில், 500 – 600 கோடி ரூபாய் வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|