பதிவு செய்த நாள்
20 ஜூன்2018
00:28
புதுடில்லி : உலகளவில், ‘5ஜி’ தொழில்நுட்பத்தில், மொபைல்போன் சேவை துவங்கும்போது, இந்தியாவிலும் அச்சேவையை அறிமுகப்படுத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டில்லியில், மொபைல்போன் நிறுவன கூட்டமைப்பின் கருத்தரங்கில், பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைமை பொது மேலாளர் அனில் ஜெயின் பேசியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., இந்தியாவில் ‘2ஜி, 3ஜி’ தொழில்நுட்பத்திலான மொபைல்போன் சேவையை அறிமுகப்படுத்துவதில், பின்தங்கி விட்டது. ஆனால், மின்னல் வேகத்தில் தகவல்கள், படங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ள உதவும், அடுத்த தலைமுறைக்கான, ‘5ஜி’ தொழில்நுட்ப சேவையில், அந்த நிலை ஏற்படாது.
உலகளவில், 2020ல், ‘5ஜி’ மொபைல்போன் சேவை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு துவங்கும்போது, இந்தியாவிலும், அச்சேவையை, பி.எஸ்.என்.எல்., துவக்கும். இதற்காக, ஜப்பானைச் சேர்ந்த, என்.டி.டி.ஏ.டி.சி., நிறுவனத்தின் துணை நிறுவனமான, விர்கோ கார்ப்பரேஷன் உடன், ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம், சோதனை அடிப்படையில், ‘5ஜி’ சேவை மேற்கொள்ளப்படும். இது தவிர, சாப்ட்வேர் சார்ந்த ஒருங்கிணைப்பு வசதிகளுக்கு, நோக்கியா நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்.
மேலும், தொழில் நிறுவனங்களுக்கு, ‘5ஜி’சேவை வழங்குவதற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களுக்கு, அமெரிக்காவின் கோரியன்ட் நிறுவனத்துடன், பி.எஸ்.என்.எல்., கைகோர்த்துள்ளது. கடந்த ஆண்டு, செப்.,ல், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொலை தொடர்பு துறையிடம், ‘4ஜி’ மட்டுமின்றி, ‘5ஜி’ சேவையை வழங்குவதற்காக, 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை உரிமம் பெறப்பட்டுள்ளது. இத்தகைய முன்னேற்பாடுகளால், உலகளவில் ‘5ஜி’ சேவை அறிமுகமாகும்போது, இந்தியாவிலும், அச்சேவையை பி.எஸ்.என்.எல்., துவக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|