மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் குறைவுமாலை நேர நிலவரம், தங்கம் விலையில் குறைவு ... தமிழகத்தில் தொழில் துவங்கும் 20 பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கும் 20 பெரு நிறுவனங்கள் ...
சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2018
00:12

சின்­ன­வெங்­கா­யம் கொள்­மு­தல்; விவ­சா­யி­கள் மகிழ்ச்சி
காங்­கே­யம் : சின்ன வெங்­கா­யம் கொள்­மு­தல் விலை கிலோ, 55 ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ள­தால், விவ­சா­யி­கள் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர்.

சின்­ன­வெங்­கா­யம் சாகு­படி, திருப்­பூர் மாவட்­டம், அவி­நா­சி­பா­ளை­யம், சம்­பந்­தம்­பா­ளை­யம், காங்­கே­யம், குண்­ட­டம் பகு­தி­களில் அதி­க­ள­வில் நடக்­கிறது. உள்­ளூர் வியா­பா­ரி­க­ளால் கொள்­மு­தல் செய்­யப்­பட்டு திண்­டுக்­கல், திருச்சி, கோவை, மதுரை, சென்னை மற்­றும் கேரள மாநி­லத்­துக்கு அனுப்­பப்­ப­டு­கிறது.

வறட்­சி­யால் கடந்­தாண்டு கிலோ, 150 ரூபாய் வரை, கொள்­மு­தல் செய்­யப்­பட்­டது. கடந்த சில மாதங்­க­ளாக, வெளி­மா­நில வரத்­தா­லும், தமி­ழ­கத்­தில் அதி­க­ளவு அறு­வடை செய்­யப்­பட்­ட­தா­லும், விலை சரிந்து கிலோ, 15 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. இத­னால் விவ­சா­யி­கள் பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், கடந்த, 10 நாட்­க­ளாக, வெங்­காய விளைச்­சல் குறைந்­த­தா­லும், கர்­நா­ட­கா­வில் அதி­க­மழை பெய்து, வரத்து நின்­ற­தா­லும் விலை உயர்வு ஏற்­பட்­டுள்­ளது. தற்­போது கிலோ, 50 முதல், 55 ரூபாய் வரை கொள்­மு­தல் செய்­யப்­ப­டு­வ­தால் விவ­சா­யி­கள் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர்.

–––

தேனி வாழைக்­காய் ஏற்­று­மதி சரிவு
சின்­ன­ம­னுார் : அரபு நாடு­க­ளுக்கு, பிலிப்­பைன்­சில் இருந்து வாழைக்­காய் இறக்­கு­ம­தி­யா­வ­தால், தேனி வாழைக்­காய் ஏற்­று­ம­தி­யில் சரிவு ஏற்­பட்டு, கிலோ, 9 ரூபா­யாக குறைந்­துள்­ளது.

தேனி மாவட்­டத்­தில் இருந்து, ‘திசு வாழை’ அரபு நாடு­க­ளுக்கு அதி­கம் ஏற்­று­மதி ஆகிறது. இதற்­காக வாழைக்­காய்­கள் வெட்டி, பதப்­ப­டுத்­தப்­பட்டு கப்­பல்­கள் மூலம் அனுப்பி வைக்­கப்­ப­டு­கிறது. தற்­போது மாம்­ப­ழம் சீச­னால், உள்­ளூர் மார்க்­கெட்­டில் விலை சரிவை சந்­தித்த வாழைக்­காய்­கள், ஏற்­று­மதி பாதிப்­பால் மேலும் சரிந்­துள்­ளது. கடந்த மாதம், 1 கிலோ வாழைக்­காய், 17 ரூபாய் வரை விற்­றது; தற்­போது, 9 ரூபாய்க்கு விற்­கப்படு­கிறது.

இது குறித்து, குச்­ச­னுார் விவ­சாயி முரு­கன் கூறு­கை­யில், ‘‘அரபு நாடு­க­ளுக்கு பிலிப்­பைன்­ஸில் இருந்து வாழைக்­காய் இறக்­கு­மதி துவங்­கி­யுள்­ள­தால், அங்கு தேனி காய்க்கு, ‘கிராக்கி’ இல்லை. இங்கே தார்­களை வெட்டி இருப்பு வைத்து விற்­கும் வச­தி­யில்­லா­த­தால், கிடைக்­கும் விலைக்கு விற்­பனை செய்­யும் நிலை உள்­ளது,’’ என்­றார்.

––––

வட­மா­நில வரத்து சரி­வால் உளுத்­தம் பருப்பு விலை உயர்வு
சேலம் : வட மாநி­லங்­க­ளி­லி­ருந்து, உளுத்­தம் பருப்பு வரத்து சரிந்­த­தால், தமி­ழ­கத்­தில், விலை கிலோ­வுக்கு நான்கு ரூபாய் உயர்ந்­தது.

தமி­ழக உளுந்­தம் பருப்பு தேவை­யில், 80 சத­வீ­தத்தை, மத்­தி­ய­பி­ர­தே­சம், மஹா­ராஷ்­டிரா, குஜ­ராத் உள்­ளிட்ட வட மாநி­லங்­கள் பூர்த்தி செய்­கின்­றன. கடந்த மாதம் வரை அங்­கி­ருந்து வாரம், 150 லாரி­களில் வந்த வரத்து, தற்­போது, 100 லாரி­க­ளாக குறைந்­துள்­ளது. இத­னால் விலை உயர்வை எதிர்­பார்த்து மொத்த வியா­பா­ரி­கள் இருப்பு வைத்து வரு­கின்­ற­னர். அதன்­படி நேற்று கிலோ­வுக்கு நான்கு ரூபாய் உயர்ந்­தது.

கடந்த வாரம் வரை முதல் ரக உளுத்­தம் பருப்பு கிலோ, 76க்கு விற்­றது, 80 ரூபாய்; இரண்­டாம் ரகம், 66க்கு விற்­றது, 70 ரூபாய்; மூன்­றாம் ரகம், 56க்கு விற்­றது, 60 ரூபாய் என, உயர்ந்­துள்­ளது. வட­மா­நில உளுத்­தம் பருப்பு வரத்து தொடர்ந்து சரிந்து வரு­வ­தால், விலை மேலும் உயர வாய்ப்­புள்­ள­தாக வியா­பா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)