பதிவு செய்த நாள்
29 ஜூன்2018
00:15
புதுடில்லி : எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், மொத்தம், 2.54 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. அதில், 2.21 கோடி பங்குகள், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. நிறுவனத்தின் தகுதியுள்ள பணியாளர்களுக்கு, 3.20 லட்சம் பங்குகள் ஒதுக்கப்படும். இது தவிர, எச்.டி.எப்.சி.,பங்கு முதலீட்டாளர்களுக்கு, 24 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
எச்.டி.எப்.சி., மற்றும் ஸ்டாண்டர்ட் லைப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியை உருவாக்கியுள்ளன. மியூச்சுவல் பண்டு வணிகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், பல்வேறு திட்டங்களின் கீழ், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
இந்தாண்டு, மியூச்சுவல் பண்டு துறையில் இதுவரை, ரிலையன்ஸ் நிப்பான் லைப், ஏ.எம்.சி., நிறுவனம் மட்டுமே பங்கு வெளியீடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|