பதிவு செய்த நாள்
02 ஜூலை2018
00:47
தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்.,பில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் திட்டத்தில் நீடிக்கும் வகையில் இந்த மாற்றம் அமைகிறது.பி.எப்., திட்டத்தை உறுப்பினர்களுக்கு நட்பானதாக மாற்றும் வகையில், இதை நிர்வகிக்கும் அமைப்பு, பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்த வரிசையில், பணத்தை விலக்கி கொள்வது தொடர்பான விதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விதிமுறைகளின் படி, உறுப்பினர் ஒருவர் வேலையிழந்த பின் இரண்டு மாதங்களுக்கு மேல் பணியில் இல்லாமல் இருந்தால், தன் கணக்கில் உள்ள முழுத்தொகையையும் விலக்கிக் கொள்ளலாம். தொடர்ந்து, 10 ஆண்டுகள் பங்களிப்பு செலுத்தியிருந்தால் பென்ஷன் திட்டத்தின் கீழ் பலன் பெறலாம். அதற்கு முன் விலகினால் பென்ஷன் கிடையாது.
புதிய விதிகளின் படி வேலை இழந்த பின், முதல் மாதத்தின் முடிவில், 75 சதவீத தொகையை விலக்கி கொள்ளலாம். இதன் மூலம் நிதி தேவைகள் அல்லது சொந்த தொழில் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். இரண்டு மாதங்களுக்குப்பின், எஞ்சிய தொகையை விலக்கிக் கொள்ளலாம் அல்லது, புதிய வேலையில் சேர்ந்து கணக்கை தொடரலாம்.
முழு தொகையையும் விலக்கி கொள்ளாத நிலையில், உறுப்பினர்கள் இத்திட்டத்தில் தொடரும் வாய்ப்புள்ளது. தற்போது, முன்பண வசதி இல்லாததால், பலரும் பணிஇழப்பிற்கு பின் முழு தொகையையும் விலக்கி கொள்கின்றனர். ஆனால், வேறு வேலையில் சேர்ந்தாலும், பி.எப்.,பை தொடர்வது இல்லை.
புதிய விதி இதை மாற்றி, 75 சதவீத பணத்தை விலக்கி கொள்வதை சாத்தியமாக்குவதோடு, சமூக பாதுகாப்பு திட்டமான இதில் தொடரவும் வாய்ப்பளிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|