பதிவு செய்த நாள்
03 ஜூலை2018
00:54
கொச்சி:இந்தியாவின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், 21 சதவீதம் அதிகரித்து உள்ளது.கடந்த நிதியாண்டில், இந்தியாவிலிருந்து, 13,77,244 மில்லியன் டன் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு, 7.08 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.இதுவே, அதற்கு முந்தைய நிதியாண்டில், 11,34,948 மில்லியன் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, 5.77 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டப்பட்டது.
கடந்த நிதியாண்டு ஏற்றுமதியை, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 21.35 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.இது குறித்து, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர், ஏ.ஜெயதிலக் கூறியதாவது:வழக்கம்போலவே, ஏற்றுமதியில் உறைந்த இறால் மற்றும் மீன்கள் ஆகியவையே, கடந்த ஆண்டும் முன்னணியில் உள்ளன. கடல் பொருட்கள் கடந்த நிதியாண்டில், 45,106.89 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், 37,870.90 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு, 32.76 சதவீதமும்; தென் கிழக்கு ஆசியாவுக்கு, 31.59 சதவீதமும்; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, 15.77 சதவீதமும்; ஜப்பானுக்கு, 6.29 சதவீதமும்; மத்திய கிழக்கு மற்றும் சீனாவுக்கு, 3.21 சதவீதமும் ஏற்றுமதி ஆகின்றன.
உலகளவில், கடல் உணவு பொருட்கள் வர்த்தகத்தில் நிச்சயமற்ற நிலை இருப்பினும், இந்தியா உறைந்த இறால் மற்றும் மீன் மூலம் தன் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.மொத்த கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில், 41.10 சதவீத பங்கை உறைந்த இறால் பிடித்துள்ளது.
வருமானத்தை பொறுத்தவரையில், மொத்த வருமானத்தில், 68.46 சதவீதத்தை இறால் ஈட்டி வருகிறது. 2022ல் ஏற்றுமதியின் மூலமாக, 10 பில்லியன் டாலர் அளவுக்கு வருமானத்தை ஈட்ட முடியும் எனக் கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|