பதிவு செய்த நாள்
03 ஜூலை2018
01:04
புதுடில்லி:பாரத் ஓட்டல்ஸ் மற்றும்மில்டெக் மிஷினரி நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளுக்கு அனுமதி கோரி, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளன.பாரத் ஓட்டல்ஸ், ‘லலித்’ என்ற பெயரில், 12, நட்சத்திர ஓட்டல்களை நடத்துகிறது. அத்துடன், சுற்றுலா தலங்களில், இரண்டு, ‘லலித் டிராவலர்’ ஓட்டல்களும் இந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளன.
ஒட்டுமொத்தமாக, 2,261 தங்கும் அறைகளை நிர்வகிக்கும், இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 1,200 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இதற்காக, ‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது.இதேபோல, மில்டெக் மிஷினரி நிறுவனமும், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி, செபியிடம்விண்ணப்பித்து உள்ளது. இவ்வெளியீட்டில், 500 கோடி ரூபாய் திரட்ட, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மில்டெக் மிஷினரி, நெல் உள்ளிட்ட வேளாண் பொருட்களை, மதிப்பு கூட்டிய பொருட்களாக மாற்றும் ஆலைகளுக்கு, இயந்திரங்களை தயாரித்து அளித்து வருகிறது.செபியின் ஒப்புதலுக்கு பின், இரு நிறுவனங்களும் பங்கு வெளியீட்டு தேதியை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|