பதிவு செய்த நாள்
05 ஜூலை2018
00:20
புதுடில்லி:கடந்த ஜூன் மாதம், நாட்டின் சேவைகள் துறை மீண்டும் ஏற்றம் கண்டு, ஓராண்டு காணாத வளர்ச்சியை கண்டுள்ளது.
இது குறித்து, நிக்கி – மார்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சேவை நிறுவனங்களுக்கு, ஜூன் மாதம் அதிக அளவில் புதிய, ‘ஆர்டர்’கள் கிடைத்தன. இதன் காரணமாக, ஒட்டுமொத்த சேவைகள் துறை, ஓராண்டு காணாத வளர்ச்சியை கண்டுள்ளது.அதன் அடிப்படையில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், நிக்கி இந்தியா, எஸ்.பி.ஏ.ஐ., குறியீடு, 52.6 புள்ளியாக உயர்ந்துள்ளது.
இது, 2017 ஜூன் மாதத்திற்கு பின், காணப்பட்ட அதிகபட்ச வளர்ச்சியாகும். இக்குறியீடு, 50 புள்ளியை தாண்டினால், வளர்ச்சியாக கருதப்படும்.
தேவைப்பாடு
இந்தாண்டு மே மாதம், சேவைகள் துறை, வளர்ச்சியில் பின்னடைவைக் கண்டு, 49.6 புள்ளியாக சரிந்திருந்தது.இந்நிலையில், ஜூன் மாதம், இத்துறை, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதற்கு, தேவைப்பாடு பெருகியிருப்பதும், புதிய ஆர்டர்கள் அதிகம் குவிந்ததும் காரணம். இதையொட்டி, சேவை நிறுவனங்கள் அதிக அளவில் பணியாளர்களை நியமித்து, பணிகளை முடிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டன.
அதேசமயம், இந்நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொடர்ந்து சுமையாகவே இருந்து வருகிறது. இத் துறையில், சேவைக் கட்டணம் தான், வாடிக்கையாளரை ஈர்க்கும் முக்கிய காரணியாக உள்ளது. அதனால், இந்த விலை உயர்வை, சேவை நிறுவனங்களால், முழுமையாக வாடிக்கையாளர்களிடம் சுமத்த முடியவில்லை.
தயாரிப்பு
ஜூன் மாதம், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி விகிதமும் சிறப்பாக இருந்தது.இந்த இரு துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி அடிப்படையிலான, நிக்கி இந்தியா சி.பி.எம்.ஐ.ஓ.ஐ., குறியீடு, 53.3 புள்ளியாக உயர்ந்துள்ளது. கடந்த, 2016, அக்டோபருக்கு பின், இக் குறியீடு, இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. இது, மே மாதம், 50.4 புள்ளியாக இருந்தது.
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் பொருளாதாரம், மிக வலிமையாக வளர்ச்சி பெற்று வருவதை இந்த ஆய்வு முடிவுகள் குறிக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓட்டல் – சுற்றுலா – போக்குவரத்து இந்திய சேவைகள் துறையில், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த சேவைகள் அடங்கியுள்ளன.
கடந்த, 2014 ஜூலை முதல் அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் செலவினம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பின் சரிவு போன்றவற்றால், பணவீக்கம் மேலும் உயரும். அதனால், ரிசர்வ் வங்கி மீண்டும், ‘ரெப்போ’ வட்டியை உயர்த்த வாய்ப்பு உள்ளது.
நிக்கி, மார்கிட் அறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|