பதிவு செய்த நாள்
06 ஜூலை2018
01:32
மும்பை:ரிலையன்ஸ் குழுமம், ‘ஜியோகிகா பைபர்’ என்ற அதிநவீன தொழில்நுட்பத்திலானஇணையச் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. அத்துடன், ‘ஆர்ஜியோ’ வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான கவர்ச்சி திட்டங்களையும் அறிவித்துள்ளது.
மும்பையில் நேற்று, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின், 41வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி பேசியவற்றின் முக்கிய அம்சங்கள்:
*ரிலையன்ஸ் நிகர லாபம், 2017 – 18ம் நிதியாண்டில், 20.6 சதவீதம் உயர்ந்து, 36,075 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதுl 113 நாடுகளுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 8.9 சதவீதம்
*சுங்கம் மற்றும் கலால் வரியாக, 26,312 கோடி ரூபாய் செலுத்தியுள்ளோம். இது, இந்தியா ஈட்டிய இவ்வகை வரி வருவாயில், 6.4 சதவீதம்l நிறுவனம், 42,553 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., செலுத்தி, அதிலும் சாதனை படைத்து உள்ளது
*தனியார் துறையில், அதிக வருமான வரி செலுத்திய நிறுவனமாக, ரிலையன்ஸ் உள்ளது. 9,844 கோடி ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளதுl அதிநவீன கம்பிவட தொழில்நுட்பத்தில், ஜியோகிகா பைபர் இணையச் சேவை அறிமுகமாகிறது. இது, நாடு முழுவதும் உள்ள இல்லங்களின், 24 மணி நேர அவசர உதவிகளுக்கு புதிய வடிவமைப்பை ஏற்படுத்தும்
*இச்சேவையில், வாடிக்கையாளர்கள், மிகத் துல்லியமான தரத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணலாம். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வசதி, குரல் வழி கட்டளையில் பணிகளை செய்யும் மெய்நிகர் உதவியாளர் சேவை ஆகியவற்றையும் பெறலாம். ‘ஸ்மார்ட் ஹோம்’ எனப்படும், இல்லத்தில் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களின் தன்னிச்சை தொடர்புக்கும், பயன்பாட்டிற்கும் இச்சேவை உதவும்
*ஜியோகிகா பைபர் சேவை, லட்சக்கணக்கான வீடுகளில் சோதனை அடிப்படையில் நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ளோர், ‘மைஜியோ’ அல்லது ‘ஜியோ டாட் காம்’ வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வணிக ரீதியில், இச்சேவைக்கான பதிவு, ஆக., 15ல் துவங்குகிறதுl ஆர்ஜியோ மொபைல் போனில், ‘பேஸ்புக், யுடியூப்’ பயன்பாட்டை அடுத்து, ‘வாட்ஸ் ஆப்’ வசதியும் அறிமுகமாகிறது
*குறுக்கு திரை, விசைப்பலகையுடன், உயர் திறனில் புதிய, ‘ஜியோ போன் – 2’ ஆக., 15ல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை, 2,999 ரூபாய்l ஜியோ போன் வாடிக்கையாளர்கள், தற்போது பயன்படுத்தும் ஜியோ போனை திரும்பக் கொடுத்து, 501 ரூபாய்க்கு புதிய போனை வாங்கிக் கொள்ளலாம்
*4,000 மெகா பிக்சல்துல்லியத்தில், வீடியோ விளையாட்டுகளுக்கு உதவும், ‘ஜியோகிகா டிவி’ என்ற ‘செட்டாப் பாக்ஸ்’ அறிமுகமாகிறது.
யாரும் செய்யாத சாதனைஆர்ஜியோ, 22 மாதங்களில், இரு மடங்கிற்கும் அதிகமானோரை இணைத்து, 21.50 கோடி சந்தாதாரர்கள் கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. உலகில் வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனமும், குறுகிய காலத்தில் இத்தகைய சாதனையை நிகழ்த்தியதில்லை. ரிலையன்சை, தொழில்நுட்ப அடித்தள நிறுவனமாக, உருமாற்றிக் கொள்ள, ஆர்ஜியோ உதவியுள்ளது.
ஜியோ மூலம், நாடு முழுவதும் உள்ள குக்கிராமங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு, இணைய சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.– முகேஷ் அம்பானி, தலைவர், ரிலையன்ஸ் குழுமம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|