பதிவு செய்த நாள்
09 ஜூலை2018
00:24
தங்க நகைகளை வாங்கும் போது, அது முதலீடாகவும் அமைகிறது. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. எனினும், முதலீடு நோக்கில் தங்கத்தை அணுகும் போது, அது தரும் பலன் போதுமானதா எனும் கேள்வியும் எழுகிறது. நிதி இலக்குகளை அடைய தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றாலும், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சரியான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
பணவீக்க பாதுகாப்பு
பொதுவாக பணவீக்கம் உயரும் போது பணத்தின் வாங்கும் சக்தி குறைகிறது. நீண்ட கால நோக்கில், தங்கத்துடன் ஒப்பிடும் போது முக்கிய நாடுகளின் பண மதிப்பு குறைந்தே காணப்படுகிறது. எனவே பலரும் பணத்தை தங்கத்தின் வடிவில் வைத்திருக்க விரும்புகின்றனர். பணவீக்கத்திற்கு எதிரான பாதுக்காப்பாக தங்கம் அமைகிறது.
உணர்வு மதிப்பு
தங்கம் தொட்டு பார்க்க கூடிய சொத்தாக இருப்பதால், அதில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. ரியல் எஸ்டேட் போன்ற இதே வகை சொத்துகளுடன் ஒப்பிடும் போது, தங்கம் வாங்குவது எளிதானது. ஆனால் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் அவசியமும் எழுகிறது.
முதலீடு பரவலாக்கம்
தங்கம் முதலீடு பரவலாக்கத்திற்கும் உதவுகிறது. ஒரே வகையான நிதி சாதனங்களில் முதலீடு செய்யாமல், பரவலாக முதலீடு செய்வது நல்லது என கருதப்படுகிறது. இந்த வகை பரவலாக்கத்திற்கான ஒரு வழியாக தங்கம் இருக்கிறது. சர்வதேச நிதி போக்குகளுக்கு எதிராகவும் தங்கம் பாதுகாப்பு அளிக்கிறது.
பணமாக்கும் வாய்ப்பு
முதலீடு தரும் பலன்களோடு அதன் பணமாக்கும் வாய்ப்பும் முக்கியமானது. அதாவது விரும்பிய போது பணமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும். தங்கத்தில் இந்த வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. விரும்பும் போது எளிதாக விற்றுவிடலாம். அவசரத்தேவை எனில், தங்கத்தை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.
புயலுக்கு நடுவே
பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் பங்கு முதலீடு உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகலாம். ஆனால், தங்கம், தன் மதிப்பை தக்கவைத்துக் கொள்வதாக கருதப்படுகிறது. போர் போன்ற அம்சங்கள் மற்ற முதலீடுகளை பாதிக்கும் நிலையில், தங்கத்தின் மதிப்பு அதிகமாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|