இந்­திய சுற்­றுலா பய­ணி­யர் மன­நி­லை­யில் மாற்­றம்இந்­திய சுற்­றுலா பய­ணி­யர் மன­நி­லை­யில் மாற்­றம் ... வர்த்­தக போரும் நம் முத­லீ­டு­களும் வர்த்­தக போரும் நம் முத­லீ­டு­களும் ...
எந்த கார­ணங்­க­ளுக்­காக தங்­கத்­தில் முத­லீடு செய்­ய­லாம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2018
00:24

தங்க நகை­களை வாங்­கும் போது, அது முத­லீ­டா­க­வும் அமை­கிறது. தங்­கத்­தில் முத­லீடு செய்­வது பாது­காப்­பா­ன­தா­க­வும் கரு­தப்­ப­டு­கிறது. எனி­னும், முத­லீடு நோக்­கில் தங்­கத்தை அணு­கும் போது, அது தரும் பலன் போது­மா­னதா எனும் கேள்­வி­யும் எழு­கிறது. நிதி இலக்­கு­களை அடைய தங்­கத்­தில் முத­லீடு செய்­ய­லாம் என்­றா­லும், தங்­கத்­தில் முத­லீடு செய்­வ­தற்­கான சரி­யான கார­ணங்­களை அறிந்து கொள்ள வேண்­டும்.
பண­வீக்க பாது­காப்பு
பொது­வாக பண­வீக்­கம் உய­ரும் போது பணத்­தின் வாங்கும் சக்தி குறை­கிறது. நீண்ட கால நோக்­கில், தங்­கத்­து­டன் ஒப்­பி­டும் போது முக்­கிய நாடு­க­ளின் பண மதிப்பு குறைந்தே காணப்­ப­டு­கிறது. எனவே பல­ரும் பணத்தை தங்­கத்­தின் வடி­வில் வைத்­தி­ருக்க விரும்­பு­கின்­ற­னர். பணவீ­க்கத்­திற்கு எதி­ரான பாதுக்­காப்­பாக தங்­கம் அமை­கிறது.
உணர்வு மதிப்பு
தங்­கம் தொட்டு பார்க்க கூடிய சொத்­தாக இருப்­ப­தால், அதில் முத­லீடு செய்­வது முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பாது­காப்பு உணர்வை அளிக்­கிறது. ரியல் எஸ்­டேட் போன்ற இதே வகை சொத்­து­க­ளு­டன் ஒப்­பி­டும் போது, தங்­கம் வாங்­கு­வது எளி­தா­னது. ஆனால் தங்­கத்தை பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கும் அவ­சி­ய­மும் எழு­கிறது.
முத­லீடு பர­வ­லாக்­கம்
தங்­கம் முத­லீடு பர­வ­லாக்­கத்­திற்­கும் உத­வு­கிறது. ஒரே வகை­யான நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­யா­மல், பர­வ­லாக முத­லீடு செய்­வது நல்­லது என கரு­தப்­ப­டு­கிறது. இந்த வகை பர­வ­லாக்­கத்­திற்­கான ஒரு வழி­யாக தங்­கம் இருக்­கிறது. சர்­வ­தேச நிதி போக்­கு­க­ளுக்கு எதி­ரா­க­வும் தங்­கம் பாது­காப்பு அளிக்­கிறது.
பண­மாக்­கும் வாய்ப்பு
முத­லீடு தரும் பலன்­க­ளோடு அதன் பண­மாக்­கும் வாய்ப்­பும் முக்­கி­ய­மா­னது. அதா­வது விரும்­பிய போது பண­மாக மாற்­றிக்­கொள்­ளும் வாய்ப்பு இருக்க வேண்­டும். தங்­கத்­தில் இந்த வாய்ப்பு அதி­க­மா­கவே இருக்­கிறது. விரும்­பும் போது எளி­தாக விற்­று­வி­ட­லாம். அவ­ச­ரத்­தேவை எனில், தங்­கத்தை அட­மா­னம் வைத்­தும் கடன் பெற­லாம்.
புய­லுக்கு நடுவே
பல்­வேறு கார­ணங்­க­ளால் சர்­வ­தேச அள­வில் பொரு­ளா­தார நெருக்­கடி ஏற்­ப­ட­லாம். இது போன்ற நேரங்­களில் பங்கு முத­லீடு உள்­ளிட்­டவை பாதிப்­புக்­குள்­ளா­க­லாம். ஆனால், தங்­கம், தன் மதிப்பை தக்­க­வைத்­துக் ­கொள்­வ­தாக கரு­தப்­ப­டு­கிறது. போர் போன்ற அம்­சங்­கள் மற்ற முத­லீ­டு­களை பாதிக்­கும் நிலை­யில், தங்­கத்­தின் மதிப்பு அதி­க­மா­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)