பதிவு செய்த நாள்
10 ஜூலை2018
06:21
தமிழகத்தில், 10 ஆண்டுகளில், 600 ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு முன், 50 நிறுவனங்கள் வரை முதலீடு செய்திருந்தன. தற்போது, மொத்தம், 642 ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இதில் குறிப்பாக, நிசான் கார், யமஹா பைக் போன்ற ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், ஹிட்டாச்சி உட்பட, பல்வேறு நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்துள்ளன. சில ஆண்டுகளாக, பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய, மிஷூஹோ, பேங்க் ஆப் டோக்கியோ மிட்சூபிசி ஆகிய ஜப்பானின் முன்னணி வங்கிகள் உதவி புரிகின்றன.
இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய, அந்த வங்கிகள் பரிந்துரை செய்கின்றன. இதன் மூலம், இந்தியாவில், ஜப்பான் நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்த மாநிலங்களில், தமிழகம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|