பதிவு செய்த நாள்
12 ஜூலை2018
00:15
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், முதன் முதலாக, இணையம் வாயிலான தொலைபேசி சேவையை துவக்கியுள்ளது.
இதன் மூலம், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், மொபைல் போனில், 'விங்ஸ்' என்ற, 'ஆப்'பை பதிவிறக்கி, நாட்டில் உள்ள எந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கும் பேசலாம்.இந்த சேவைக்கான பதிவு, வரும், 25ல் துவங்க உள்ளதாக, பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், மனோஜ் சின்ஹா கூறியதாவது:
தொலை தொடர்பு சேவை துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையிலும், இச்சந்தையில் தன் பங்களிப்பை, பி.எஸ்.என்.எல்., உயர்த்தி வருவது பாராட்டத்தக்கது. இந்நிறுவனம் தற்போது, இணையம் வாயிலான தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், 'சிம்' இல்லாமல், எந்த தொலைபேசி எண்ணிற்கும் பேசலாம்.இதற்கு முன், குறிப்பிட்ட, 'ஆப்'பை பதிவிறக்கி வைத்திருப்போர் இடையே தான் பேச முடியும்; தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேச முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|