பதிவு செய்த நாள்
16 ஜூலை2018
02:31
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, கடந்த வாரம், 270 புள்ளிகள் உயர்ந்து, 11,076 புள்ளிகளை எட்டியது. கடந்த ஆறு வார காலத்தில் சீரான போக்குக்கு பிறகு, சந்தையில் பங்குகளின் விலை கடந்த வாரம் உயர்ந்தது.
இருப்பினும், ரியல் எஸ்டேட், பொதுத்துறை நிறுவனங்கள், மூலதன பொருட்கள் மற்றும் சில துறை பங்குகளில் சரிவில் வர்த்தகம் நடைபெற்றது.நிப்டி இண்டெக்ஸில் உள்ள, 50 பங்குகளில், 5 பங்குகள் கடந்த வாரத்தில் வரலாற்று உச்சத்தை எட்டின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸ் 30ல், ரிலையன்ஸ் மற்றும் இன்போசிஸ் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக, தொழில்நுட்ப துறை சார்ந்த பங்குகள் வருமானம் அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தில், பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.கடந்த வாரங்களில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை சரிவு, பங்கு சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தது. அமெரிக்கா -– சீனா இடையேயான வர்த்தக மோதலில், ஒரு சுமுக உடன்படிக்கை ஏற்படலாம் என்ற கருத்து நிலவியது.
மேலும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கொள்முதல், கடந்த புதன்கிழமை அன்று அதிகரித்தது. இதன் காரணமாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி, உயர்ந்து வர்த்தகமாகியது.கடந்த புதன் அன்று, அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், 636.27 கோடி ரூபாய்க்கும், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், 15.33 கோடி ரூபாய்க்கும் நேரடி கொள்முதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், தென்மேற்கு பருவமழை இதுவரை சராசரிக்கு மேல் பெய்ததாலும், வரும் காலாண்டில் நிறுவனங்களின் ஆதாயம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் சந்தை வலுப்பெற்றது.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி, முதல் ரெசிஸ்டென்ட், 11,170 மற்றும், 11,300 ஆகும். சப்போர்ட், 10,905 ஆகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|