பதிவு செய்த நாள்
25 ஜூலை2018
23:19
ஈரோடு : மகளிர் திட்ட குழுவினர் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய, அமேசான் நிறுவனம், மாவட்ட வாரியாக, தேர்வு செய்து வருகிறது.
கடந்த பொங்கல் பண்டிகையின்போது, அமேசான் மூலம், பொங்கலுக்கான மண்பானை, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட காய்கறி, பொருட்களை ஆன்லைனில் பதிவு செய்து, வீடுகளில் வழங்கினர். தற்போது, மகளிர் திட்ட குழுவினர் தயாரிக்கும் பாரம்பரியமான, கைவினை பொருள், உணவு பொருட்களை தேர்வு செய்து, அந்தந்த பகுதியின், ‘பிராண்ட் நேம்’ வைத்து, சர்வதேச அளவில், விற்பனை சந்தையை ஏற்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் கூறியதாவது: ஈரோட்டில், மகளிர் திட்டம் மூலம், கடந்த வாரம், 61 ஸ்டால் கொண்ட, மகளிர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை, அமேசான் நிறுவனம் ஒருங்கிணைந்து நடத்தியது. இதில், ஈரோடு, திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட குழுவினரின் உற்பத்தி பொருட்களான மண் பாண்டங்கள், மரப்பொருட்கள், சிற்பங்கள், துணிகள், மஞ்சள், கருப்பட்டி, நாட்டு சர்க்கரை காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், அம்மாபேட்டை பகுதி மக்காசோளம், நிலக்கடலை மற்றும் அவற்றின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், நவதானியங்கள், தேன், நாப்கின், செக்கு எண்ணெய் என, 61 மகளிர் குழுவினர் காட்சிப்படுத்தினர். அவற்றை, 360 டிகிரியில், அமேசான் நிறுவனத்தினர் வீடியோ பதிவு, போட்டோ எடுத்து சென்றனர். ஈரோடு மாவட்ட உற்பத்தி பொருட்கள், ‘பவானி’ என்ற பெயரில் விற்பனையாகும்.
இதில், சந்தை வாய்ப்புக்கான, தரமான பொருட்களை அவர்கள் தேர்வு செய்து, அறிவிப்பர். இதுபோல, பல மாவட்டங்களில், அந்தந்த பகுதி உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களை தேர்வு செய்து வருகின்றனர். அமேசான் மூலம், ஆன்லைனில் விற்பனை செய்ய உள்ளதால், மகளிர் குழுவினருக்கு, சிறந்த சந்தை வாய்ப்பு உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|