பதிவு செய்த நாள்
03 ஆக2018
00:18
சென்னை:ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய, ‘இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மையத்தை’ சிமென்டெக், ‘ஆன்டி வைரஸ்’ மென்பொருள் தயாரிப்பு நிறுவனம், சென்னையில் விரிவாக்கம் செய்துள்ளது.
இது குறித்து, சிமென்டெக் சைபர் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தின் துணை செயல் தலைவர், சமீர் கபுரியா கூறியதாவது:கம்ப்யூட்டர், மொபைல் போன்ற சாதனங்களில், வைரஸ் தாக்குதல் என்பது அதிகளவு நடைபெறுகிறது.இது போன்ற வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க, தொழில்நுட்பம், நுண்ணறிவு மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த நவீன, ‘ஆன்டி வைரஸ்’ மென்பொருள் அவசியமாகிறது. இது போன்ற மென்பொருளை சிமென்டெக் நிறுவனம் வழங்குகிறது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத, வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள் கொண்ட வைரஸ் தாக்குதல்களிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க, ஏற்கனவே உள்ள, ‘இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மையம்’ விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இந்த மையம், ஆசியாவிலேயே மிகப்பெரிய இரண்டாவது மையம் ஆகும்.
இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களின் சாதனங்கள் வைரஸ் தாக்குதலுக்கு உட்படுவதை கண்காணிக்க முடியும்.இதற்காக, சிறந்த பயிற்சி பெற்ற இணைய பாதுகாப்பு நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|