பதிவு செய்த நாள்
03 ஆக2018
00:24
புதுடில்லி:தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 25ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில், இன்று கையெழுத்தாகிறது.பிணை ஏதுமற்ற முறையில் வழங்கப்பட உள்ள இந்த கடன், 2019 மார்ச் இறுதிக்குள், பல தவணைகளில் அளிக்கப்படும்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மூன்று ஆண்டுகள் கழித்து, அரையாண்டுக்கு ஒருமுறை வீதம், ஏழு ஆண்டுகளில், கடனை திரும்பச் செலுத்தும். இக்கடனுக்கு, வங்கியின் மாதாந்திர, எம்.சி.எல்.ஆர்., அடிப்படையில், வட்டிநிர்ணயிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில், பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, இந்த கடன் பயன்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வழக்கமாக, கடன் பத்திரங்களை வெளியிட்டு, அதன் நிதி தேவையை பூர்த்தி செய்து கொள்ளும்.அதற்கு மாறாக, தற்போது, ஒரே வங்கியிடம் மிகப் பெரிய அளவிற்கு கடன் பெறுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|