பதிவு செய்த நாள்
09 ஆக2018
10:44
மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் முதல் முறையாக 38,000 புள்ளிகளை கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது. வங்கிகள், மின்துறை, பொதுத்துறை பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கியதாலும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்ததாலும் இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆக.,9, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 162.56 புள்ளிகள் உயர்ந்து 38,050.12 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டி உள்ளது. இதற்கு முன் நேற்று சென்செக்ஸ் எட்டிய 37,931.42 புள்ளிகளே புதிய உச்சமாக பார்க்கப்பட்டது. இதே போன்று பிந்டியும் 45.20 புள்ளிகள் உயர்ந்து 11.495.20 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை, கட்டுமானம், ஐடி, உலோகம், மின்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் பங்குகளும் உயர்வுடனேயே காணப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக பதற்ற நிலை காணப்பட்ட போதிலும் ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. பங்குச்சந்தைகளின் தொடர் உச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|