பதிவு செய்த நாள்
17 ஆக2018
23:21
மும்பை : நேற்று, தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, புதிய உச்சத்தை தொட்டது. நுகர்பொருள், உலோகம் மற்றும் வங்கி பங்குகள் அதிக விலைக்கு கைமாறியதால், குறியீடு உயர்ந்தது.
அத்துடன், இறக்குமதி வரி தொடர்பாக, அமெரிக்காவும், சீனாவும் பேச்சு நடத்த முன்வந்துள்ள தகவலும், பங்குச் சந்தைகள் எழுச்சிக்கு வழிகோலியது. நேற்று நிப்டி, 85.70 புள்ளிகள் உயர்ந்து, முதன் முறையாக, 11,470.75 புள்ளிகளை எட்டியது. இதற்கு முன், 9ம் தேதி, 11,470.70 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 284.32 புள்ளிகள் உயர்ந்து, 37,947.88 புள்ளிகளில் நிலை கொண்டது. எண்ணெய், எரிவாயு துறைகளை தவிர, வாகனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து துறைகளின் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. தொடர்ந்து நான்கு வாரங்களாக, பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் உயர்ந்து வருகின்றன.
நேற்று முன்தினம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், பங்குகளில், 133.78 கோடி ரூபாய் முதலீடு செய்தன. அன்னிய நிதி நிர்வாக நிறுவனங்கள், 825.08 கோடி ரூபாய் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|