பதிவு செய்த நாள்
22 ஆக2018
00:43
புதுடில்லி : தங்க ஆபரணங்கள் விற்பனையில் ஈடுபட்டுவரும், சென்கோ கோல்டு ஜுவல்லரி நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
சென்கோ கோல்டு நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலமாக, 600 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதியை, புதிய ஷோரூம்கள் துவக்கவும், மூலதன தேவைக்காகவும் பயன்படுத்த உள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, இந்நிறுவனத்துக்கு, 93 ஷோரூம்கள், 72 நகரங்களில் உள்ளன. 1,290 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்கத்தில், 60 ஷோரூம்கள், உத்தர பிரதேசத்தில், 6; ஒடிசாவில் 5; ஜார்க்கண்டில் 4; கர்நாடகா, மஹாராஷ்டிரா, அசாமில், தலா, 3; டில்லி, பீஹாரில், தலா, 2; தெலுங்கானா, சத்தீஸ்கர், ஹரியானா, மத்திய பிரதேசம், திரிபுராவில், தலா, ஒன்று என, 93 ஷோரூம்கள் இந்நிறுவனத்துக்கு உள்ளன.
பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.டி.எப்.சி., பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ், யெஸ் செக்யூரிட்டீஸ், எம்கே குளோபல் பைனான்ஷியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இந்நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|